வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் |
'லிங்கா' அலை கொஞ்சம் கொஞ்சமாக ஓய்ந்து வருவதையடுத்து, தற்போது கிறிஸ்துமஸ் அன்று வெளியாகும் படங்களையும் மீறி பொங்கலுக்கும் வெளிவரும் படங்களைப் பற்றிய தகவல்கள்தான் அதிகம் வெளிவந்து கொண்டிருக்கின்றன. “ஐ, என்னை அறிந்தால், ஆம்பள, கொம்பன்” ஆகிய படங்கள் பொங்கலுக்கு வெளிவரும் படங்களாக இருந்தாலும் அவற்றில், 'ஐ' படத்தைப் பற்றித்தான் அதிகமான பேச்சுக்களும், தகவல்களும் கோலிவுட்டைச் சுற்றி வருகின்றன. ஒரு படத்தின் வெளியீட்டிற்கு முன்னர் அதிகமான பேச்சுக்கள் அந்தப் படத்தைப் பற்றி எழுந்தால் அது ஒரு விதத்தில் ஆபத்துதான். அதுவே, எதிர்பார்ப்பை எகிற வைத்து அந்தப் படத்திற்கு நெருக்கடியைக் கொடுக்கும். படம் நன்றாக வந்துவிட்டால் பிரச்சனையில்லை, அப்படி இப்படி அமைந்தால் அவ்வளவுதான், தடுமாற்றம்தான்.
அப்படி ஒரு சூழ்நிலை 'லிங்கா' படத்திற்கு சமீபத்தில் அமைந்தது. தற்போது 'ஐ' படத்திற்கு ஆரம்பித்து விட்டது. தமிழில் பல ஏரியாக்களுக்கு 'ஐ' படத்தின் வியாபாரம் முடிந்து வரும் நிலையில், கூடவே ஆந்திரா, தெலுங்கானா ஏரியாக்களின் தெலுங்கு வியாபாரமும் ஆரம்பித்து நடந்து வருகிறது. படத்தை தெலுங்கில் மொத்தமாக விற்காமல் ஏரியா வாரியாக பிரித்து விற்று வருகிறார்களாம். அந்த விதத்தில் இதுவரை விசாகப்பட்டினம் ஏரியா 4 கோடி ரூபாய்க்கும், குண்டூர் ஏரியா 3.6 கோடி ரூபாய்க்கும், கிருஷ்ணா ஏரியா 2.3 கோடி ரூபாய்க்கும், கிழக்கு கோதாவரி ஏரியா 3 கோடி ரூபாய்க்கும் விற்கப்பட்டுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.