மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி |
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் சில மாதங்களுக்கு முன் வீசிய ஹுட் ஹுட் புயலால் பெரும் சேதம் ஏற்பட்டது. பல கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் தெலுங்கு திரையுலகத்தை சேர்ந்த பலரும் தனித் தனியாக பல லட்சங்கள் நிவாரண நிதியை அப்போதே வழங்கினர். தொடர்ந்து தெலுங்குத் திரையுலகத்தினர் கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்தி பத்து கோடி ரூபாய்க்கும் மேல் நிவாரண நிதியாக வழங்கினர்.
தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த சூர்யா, கார்த்தி, விஷால், விஜய் ஆகியோரும் நிவாரண நிதிகளை வழங்கினர். சூர்யா குடும்பத்தினர் சார்பாக மொத்தமாக 50 லட்சமும், விஷால் சார்பாக 15 லட்ச ரூபாயும், விஜய் 5 லட்ச ரூபாயும், ஆந்திர முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கியிருந்தனர். சென்னையைச் சேர்ந்த நடிகை சமந்தா 10 லட்ச ரூபாய் வழங்கியிருந்தார்.
இதனிடையே, கடந்த வாரம் ஹைதராபாத்தில் நடைபெற்ற 'லிங்கா' பட விழாவில் பேசிய ரஜினிகாந்த் சென்னைக்குச் சென்றதும் புயல் நிவாரண நிதியை வழங்குவதாகத் தெரிவித்திருந்தார். அதன் படி கடந்த 10 நாட்களுக்கு முன்பே 'ஸ்ரீ ராகவேந்திரா பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட்' மூலம் ஆந்திர முதல்வரின் நிவாரண நிதிக்கு 5 லட்ச ரூபாயை வரைவோலையாக அனுப்பியிருக்கிறார். இது பற்றிய தகவல் நேற்றுதான் வெளியானது.