Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

எனக்கு பிடித்த ஒரே ஹீரோ ரஜினி! - ஐஸ்வர்யா ராஜேஷ் பேட்டி

21 டிச, 2014 - 10:25 IST
எழுத்தின் அளவு:

நான் எத்தனையோ ஹீரோக்களின் படங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் ரஜினிதான் அவர் நடித்த படங்களைப்பார்த்து விட்டு தூங்கும்போது என் கனவில் வந்து நிற்பார். அதனால் நான் சின்ன வயதில் இருந்தே ரஜினியின் தீவிரமான ரசிகையாகி விட்டேன். அந்தவகையில், இப்போதுவரை எனக்கு பிடித்த ஒரே ஹீரோ ரஜினி மட்டுமே என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ.


தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...




நடித்து வரும் படங்கள் பற்றி சொல்லுங்கள்?


சீனு ராமசாமி இயக்கத்தில் விஜயசேதுபதி-விஷ்ணு நடித்துள்ள இடம் பொருள் ஏவல் படத்தில் நடித்திருக்கிறேன். இந்த படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிததுள்ளேன். அடுத்து, தனுஷ்- வெற்றிமாறன் தயாரித்துள்ள காக்கா முட்டையில் நடித்திருக்கிறேன அதையடுத்து குற்றமும் தண்டனையும் என்ற படத்திலும் நடிக்கிறேன். இதையடுத்தும் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.




இந்த படங்களில் எந்த படத்தை அதிகமாக எதிர்பார்க்கிறீர்கள்?


குற்றமும் தண்டனையும் படத்தில் எனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம். இதுவரை நான் நடித்திராத மட்டுமின்றி, இந்த மாதிரியான முக்கியத்துவம் உள்ள வேடங்கள் இப்போது கதாநாயகிகளுக்கு கிடைப்பது அரிது என்றுதான் சொல்லவேண்டும். இந்த படம் எனது திறமைக்கு ஒரு சவாலான படம் என்றுதான் சொல்ல வேண்டும்.


அதேபோல், இடம்பொருள் ஏவல் படத்திலும் நல்லதொரு கிராமத்து வேடம். அதையடுத்து காக்கா முட்டையில் எனக்கு ஹீரோயினி வேடம் என்று சொல்ல முடியாது. ஆனால் ஒரு அழுத்தமான வேடம். ஸ்லம் ஏரியாவில் வாழும பெண்ணாக நடித்திருக்கிறேன். அதோடு சினிமாவில் நடிப்பதற்காக ஏற்கனவே குண்டாக இருந்த நான் எனது உடல் எடையை ரொம்ப கஷ்டப்பட்டு குறைத்தேன். ஆனால் இந்த படத்துக்கு 7 கிலோ வரை எடையை அதிகப்படுத்தி நடித்திருக்கிறேன். மேலும் என்னை மேலும் டல் பண்ணி காட்டுவதற்கான மேக்கப் போட்டு நடித்திருக்கிறேன். அதனால் காக்கா முட்டையில் பக்கா ஸலம் ஏரியா பொண்ணாகவே நான் மாறியிருக்கிறேன். இந்த படமும் எனது திறமைக்கு நல்லதொரு சான்றாக அமைந்திருக்கிறது.


இந்த மாதிரியான கேரக்டர்களில் நடிக்கும்போது கேரக்டர் நடிகை என்கிற முத்திரை விழாதா?


சினிமாவைப்பொறுத்தவரை கதாநாயகிகளுக்குகூட கொஞ்சம் காலம்தான் லைப் உள்ளது. ஆனால், கேரக்டர் நடிகை என்றால் காலம் உள்ள வரை நடித்துக் கொண்டேயிருக்கலாம். ஹீரோயினி என்றால் மரத்தைச் சுற்றி டூயட் பாட வைப்பதுதான் அதிகமாக இருக்கும். ஆனால், கேரக்டர் என்கிறபோது படத்துக்குப்படம் வித்தியாசமான வேடம் கிடைக்கும் அது நடிப்பவர்களுக்கு நல்லதொரு அனுபவமாகவும், ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான திறமையை வெளிப்படுத்தி ஆற்றலை வளர்த்துக்கொள்ளவும் ஏதுவாக இருக்கும். அதனால், இப்படி நான் நடிப்பதால் என் மீது கேரக்டர் நடிகை என்கிற முத்திரை விழுந்தாலும் அதை நான் சந்தோசமாக ஏற்றுக்கொள்வேன்.


காக்கா முட்டை படத்துக்காக விருது எதிர்பார்க்கிறீர்களா?


இப்போதுவரை நான் எதையும் எதிர்பார்த்து நடிப்பதில்லை. இப்போதுதான் சினிமாவில் ஒவ்வொரு படியாக ஏறத் தொடங்கியிருக்கிறேன். அதனால் என்னை நம்பி டைரக்டர்கள் தரும் வேடத்தை நூறு சதவிகிதம் திருப்தியாக நடித்துக்கொடுக்க வேண்டும் என்பதில் மட்டும்தான் என் கவனம் உள்ளது. அதோடு, படத்துக்குப்படம் எனது நடிப்பு மெருகேறிக்கொண்டே வர வேண்டும் என்பதால், எனது முந்தைய படங்களை விட அடுத்தடுத்த படங்களில் இன்னும் வித்தியாசமான பர்பார்மென்ஸ் கொடுப்பதில் எனது ஆர்வம் அதிகமாக உள்ளது. முதலில் எனக்கு சான்ஸ் தரும் டைரக்டர்களிடம் நல்ல பெயரெடுக்க வேண்டும். அதன்பிறகு ரசிகர்களின் கைதட்டலை பெற வேண்டும். இதுதான் இப்போதைய எனது எதிர்பார்ப்பாக உள்ளது.


இடம்பொருள் ஏவல் படத்துக்காக மதுரை தமிழ் பயின்றீர்களாமே?


ஆமாம் அந்த படம் மதுரை கதைக்களம் என்பதால், அனைவருக்குமே அதற்கான பயிற்சி கொடுக்கப்பட்டது. ஏற்கனவே நான் சில படங்களுக்காக மதுரை தமிழ் பேசியிருக்கிறேன் என்றபோதும் இன்னும் சரியாக வரவில்லை என்பதால், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முனபே சில வார்த்தைகளை பேசி பயிற்சி எடுத்தேன். அதோடு, படப்பிடிப்பு நடந்தபோது, நடித்தவர்கள் அனைவருமே மதுரை தமிழிலேயே பேசிப்பழகினோம். அதற்கு அந்த ஏரியாவைச்சேர்ந்த மககளுக்கும் எங்களுக்கு உறுதுணையாக இருந்தனர். இதேபோல், திருநெல்வேலி, கோவை தமிழில் பேசி நடிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது.


உங்களது நடிப்பை விமர்சிக்கும் சினிமா நபர்கள் யார் யார்?


என்னுடன் நடிக்கும் அனைவரிடமுமே நான் தோழியாகி விடுவேன். அவர்கள் என்னிடம் பேச தயங்கி நின்றால்கூட நான் தேடிச்சென்று பழகுவேன். அந்த வகையில், அட்டகத்தியில் நடித்தபோது நந்திதாவிடம் தோழியானேன். அதன்பிறகு காயத்ரி, விஜயசேதுபதி, அட்டகத்தி தினேஷ், விஷ்ணு, விதார்த் என பலரும் என்னுடன் நட்பாக பழகி வருகிறார்கள்.


இவர்களில் சிலர் திருடன் போலீஸ் படத்தில் எனது நடிப்பை விட நான் அழகாக இருந்ததாக சொன்னார்கள். முக்கியமாக நந்திதா இப்படியே அழகை மெயின்டெய்ன் பண்ணுமாறு கேட்டுக்கொண்டார். அவருடன் அட்டகத்தியில் நடித்த நான் இப்போது இடம் பொருள் ஏவல் படத்திலும் நடித்திருக்கிறேன். நாங்கள் இருவரும் படப்பிடிப்பு தளத்தில் பள்ளிக்கூட தோழிகள் போன்று ஜாலியாக பழகினோம். ஆக, நான் விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்வதால் எனது நிறைகுறைகளை எனனுடன் நடிக்கும் இவர்கள் அனைவருமே நேரடியாகவே சொல்வார்கள்.


ஒரே படத்தில் இரண்டு ஹீரோயினி என்றாலே ஈகோ பிரச்சினை வரும் என்கிறார்களே?


மற்றவர்கள் விசயத்தில் எப்படி என்று எனக்குத் தெரியாது. ஆனால் என்னைப்பொறுத்தவரை யாரையும் நான் போட்டி மனப்பான்மையுடன் பார்ப்பதில்லை. எனக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அது கிடைக்கும். மற்றவர்களை போட்டியாக நினைப்பதினால் எந்த லாபமும் இல்லை . அதனால்தான் என்னுடன் நடிப்பவர்கள் என்னை தோழமையுடன் பார்க்கிறார்கள். இதை நான் சினிமாவில் இருக்கிற காலம் வரை தொடர்வேன.


தனுஷ் தயாரித்துள்ள படத்தில் நடித்திருககும் நீங்கள் அவருடன் ஜோடி சேர முயற்சி எடுக்கிறீர்களா?


நான் முயற்சி செய்கிறேன் என்பதற்காக எதுவும் கிடைத்து விடாது. அவர் நடிக்கும் ஒரு கதைக்கு நான் பொருத்தமாக இருந்தால மட்டுமே எனக்கு சான்ஸ் தருவார்கள். நான் கேட்டுக்கொள்கிறேன் என்பதற்காக யாருமே தரமாட்டார்கள். மேலும, எனக்கு சினிமாவில் பிடித்தமான ஒரே ஹீரோ என்றால் அது ரஜினி சார்தான். நான் சின்ன வயதில் இருநதே அவரது தீவிரமான ரசிகை. அவர் நடித்த படங்களை பார்த்து விட்டு வீட்டிற்கு வந்து தூங்கினால் என் கனவில் அவர் வருவார். அதனால் அவர் படத்தில் ஒரு சிறிய வேடம் கிடைத்தாலும் நடித்து விட வேண்டும் என்கிற ஆசை நான் சினிமாவுக்கு வந்ததில் இருந்தே இருக்கிறது. எதிர்காலத்தில் அதற்கான முயற்சியும் எடுப்பேன் என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in