ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒரு படம் மாபெரும் வெற்றி பெற்ற பிறகு, பொதுவாக அந்தப் படம் சம்பந்தப்பட்ட இயக்குனர் ஒரு படம்தான் இயக்குவார், முன்னணி ஹீரோவாக இருந்தால் அவரும் ஒரு படத்தில்தான் நடிப்பார். அந்தப் படத்தில் ஹீரோயின்களைப் பொறுத்தவரையில் அந்த மாபெரும் வெற்றிப் படம் அவர்களுக்கு மேலும் நான்கைந்து புதிய பட வாய்ப்புகளைப் பெற்றுத் தரும். ஆனால், 'கத்தி' படத்தின் மாபெரும் வெற்றி அப்படத்தின் ஹீரோயினான சமந்தாவுக்கு மேலும் பல புதிய வாய்ப்புகளைப் பெற்றுத் தரவில்லை என்பது ஆச்சரியமான விஷயமாக உள்ளது. சமந்தா தற்போது நடித்து வரும் 'பத்து எண்ணுறதுக்குள்ளே' படம் எப்போதோ கமிட் ஆன படம்தான். உண்மையிலேயே சமந்தாவுக்கு மேலும் புதிய பட வாய்ப்புகள் வரவில்லையா, அல்லது அவர் ஏற்றுக் கொள்ளவில்லையா என்பது புதிராக உள்ளது.
இன்றைய சூழ்நிலையில் தமிழ் சினிமாவில் அழகான, கிளாமரான, தமிழ் பேசத் தெரிந்த ஹீரோயின்களுக்கு பஞ்சமாக உள்ளது. அப்படியிருக்க மேற்சொன்ன அனைத்துத் தகுதிகளும் உள்ள சென்னைப் பெண்ணான சமந்தாவிற்கு புதிய வாய்ப்புகள் வரவில்லை என்று சொன்னால் அது நம்பும்படியாக இல்லை. ஒரு வேளை அவர் முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே நடிக்க முடிவு செய்திருக்கலாம், அல்லது பெரிய இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்திருக்கலாம். அப்படிப் பார்த்தால் அடுத்து அவர் அஜித்துடனோ அல்லது விஷால், கார்த்தி போன்றோருடனோதான் நடிக்க வேண்டும். அந்த அறிவிப்புகள் அடுத்த ஆண்டு வரலாம், வராமலும் போகலாம்.