சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி |
மனிதனின் உயர்வான பண்புகளையும் எப்படி வாழவேண்டும் என்கிற கருத்துக்களையும் பல்வேறு புராணங்களிலிருந்து கதைகளை நாடகமாக்கி தர்மத்தின் குரல் என்ற பெயரில் நாடகமாக வௌியிட இருக்கிறார்கள். நமது சனாதன தர்மத்தின் மேன்மைகளை ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடம், ஸ்ரீ காஞ்சி மடம், ஸ்ரீ அஹோபில மடம், ஸ்ரீ மத்வ பீடாதிபதிகள், ஸ்ரீ ஆதினங்கள் மற்றும் சான்றோர்கள் வழங்க இருகிறார்கள். தர்மபூமி, மோட்சபூமி, கர்மபூமி, ஞானபூமி, என்று ஆழ்வார்களாலும், நாயன்மார்களாலும், போற்றப்படும் நமது பாரத பூமியில் தழைக்கும் சனாதன தர்மத்தை பல்வேறு வடிவங்களில் வழங்க இருக்கிறார்கள்.
முதன் முறையாக சென்னைத் தொலைக்காட்சியின் பொதிகையில் சனாதன தர்மத்தின் உட்கருத்துக்களை எளிய முறையில் பாமர மக்களுக்கு புரிகிற வகையில் வழங்க இருக்கிறோம். பொதிகை தொலைகாட்சியில் ஜனவரி 5ல் இருந்து திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7 மணிக்கு ஒளிபரப்பப்படும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போதனை கதையினை வழங்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அறிய புகைப்படங்களும் பெரியவரின் பொன்மொழிகளும் இடம் பெரும். நிகழ்ச்சியில் குரு, சிஷ்யர்களின் வேதங்களின் சாரம், உபநிடதங்களின் ஆழ்ந்த சிந்தனை, புராணங்களின் புனித கருத்துக்கள், பக்தி மார்க்கத்தின் சிறப்பு, ஞான மார்க்கத்தின் மேன்மை, நமது கலாச்சாரத்தின் ஊன்றி விட்ட நன்னெறிகள், மனிதர்களின் கடமைகள், மகான்களின் உயர்வு என்று பல குரல்கள் ஒன்று சேர்ந்து ஒலிக்க உள்ளது என்கின்றது தர்மத்தின் குரலை தயாரிக்கும் ஸ்ரீ மகாலஷ்மி டெலிபிலிம்ஸ். விட்டல் நாராயணன் இந்த தொடரை இயக்குகிறார்.