ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அரசியலுக்கு வருவது பற்றி நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக தெரிவிக்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி உள்ளனர், மேலும் இதுதொடர்பாக உண்ணாவிரதம் இருக்கவும் முடிவு செய்துள்ளனர். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக நடிகர் ரஜினிகாந்த் திகழ்ந்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அரசியலுக்கு வருவது போன்ற சூழலையும் உருவாக்கினார். ஆனால் அதன்பின்னர் அதுப்பற்றிய எந்தமுடிவையும் அவர் அறிவிக்கவில்லை. ஆனால் அவரது ரசிகர்கள், அவர் அரசியலுக்கு வர வேண்டும் என விரும்புகின்றனர். மேலும் மாநில கட்சிகள் முதல் தேசிய கட்சிகள் வரை ரஜினியை தங்களது கட்சியில் சேரும்படி அழைப்பு விடுத்து வருகின்றனர். ஆனால் ரஜினியோ, எப்பவும் போல் இந்த விஷயத்தில் மவுனம் காத்து வருகிறார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் ரசிகர்களின் ஆலோசனைக்கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன் விபரம்... ரஜினி அரசியலுக்கு வந்தால் ஊழலற்ற ஆட்சியும், நேர்மையான ஆட்சியும் நடக்கும் என பல அரசியல் தலைவர்களே கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆகவே மக்கள் நலன் கருதி, ரஜினி அவர்கள், அரசியலுக்கு வர வேண்டும். 1996-ம் ஆண்டு ரசிகர்களை அரசியலில் ஈடுபட வைத்தார்.
அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று தமிழகம் முழுக்க ரசிகர்கள் கோவில்களில் வழிபாடு செய்தனர். நாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது பதவியோ, பாராட்டோ கிடையாது, அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். உங்களுக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இருக்கிறதா.? இல்லையா..? ரசிகர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் நேரடியாக தெரிவிக்க வேண்டும். உங்கள் முடிவு எதுவாக இருந்தாலும் நாங்கள் ஏற்போம். வாழ்வோ, சாவோ இனி உங்களோடு தான். மேலும் அவரை அரசியலுக்கு வர சொல்லி அறவழியில் உண்ணாவிரதம் இருக்கவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
சமீபத்தில், திருப்பூர் ரஜினி ரசிர்கள் அவரது பெயரில் இருந்த சங்கத்தை அரசியல் கட்சியாக மாற்றினர். ஆனால் இந்த விஷயம் ரஜினியின் பார்வைக்கே தெரியாதாம். அதேப்போன்று, இப்போதும் ரஜினி ரசிகர்கள் சிலர் அவருக்கு தெரியாமலே சென்னையில் இந்த ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளதாக கூறுகின்றனர்.