பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இன்றைய தேதியில் போட்டி நிறைந்த இந்த உலகத்தில் மற்றவர்களின் அரசியல், போட்டி, பொறாமை ஆகியவற்றுக்கிடையில் முன்னணியில் இருப்பதென்பது சாதாரண விஷயமல்ல. எப்போது நமக்கு சிறு சறுக்கல் வரும் அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என பல சந்தர்ப்பவாதிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி திரையுலகத்தில் நிறையவே நடக்கும், அதிலும் நடிகைகளைப் பொறுத்தவரையில் நட்சத்திர அந்தஸ்தைத் தக்க வைப்பதென்பது சாதாரண விஷயமில்லை. தற்போது தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அதை பலமாக ஆமோதிக்கிறார்.
“சில சமயங்களில் நாம் எடுக்கும் முடிவு நமக்கு சரியான பலனைத் தராது. அப்போது நம்மைக் காப்பாற்ற யாரும் வரமாட்டார்கள். நம்மை உயரக் கொண்டு போவதற்கும், கீழே தள்ளி விடுவதற்கும் ஒரே ஒரு படம் போதும். இப்போதும் திரையுலகில் என்னை நிலை நிறுத்திக் கொள்வதற்குப் போராடித்தான் வருகிறேன். கடுமையாக உழைத்தால்தான் இங்கு நிலைத்து நிற்க முடியும். ஒரு படத்தில் நடிக்க ஆரம்பிக்கும் போது அது சரியாக இல்லை என்று தோன்றினால் அப்போதே அதிலிருந்து நேர்மையாக விலகி விட வேண்டும். அப்படி இருந்தால்தான் நாமும் வெற்றிப் பாதையில் நடக்க முடியும்,” என தத்துவார்த்தமாக சமீபத்திய பேட்டி ஒன்றில் ஸ்ருதிஹாசன் சொல்லியிருக்கிறார்.
விஜய்யுடன் ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்து வரும் புதிய படம் அடுத்த ஆண்டு அவருக்குப் பெரிய பெயரைப் பெற்றுத் தர வாய்ப்புள்ளது.