ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'லிங்கா' திரைப்படம் வெளிவந்து ஒரு வாரம் ஆன நிலையில் வினியோகஸ்தர்ள் புகார், திரையரங்கு உரிமையாளர்கள் புகார் என தினமும் ஏதாவது ஒரு புது செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்குப் பதிலளிக்கும் விதமாக படத்தை வாங்கி வெளியிட்ட வேந்தர் மூவீஸ் நிறுவனம் சார்பில் நேற்று அனுப்பபட்ட பத்திரிகைச் செய்தியிலும், படத்தைப் பற்றி அவதூறான செய்திகளைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
இதனிடையே, 'லிங்கா' படம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் வெளியாகியது. அங்கு படம் எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை என்றாலும், இதுவரை எந்த வினியோகஸ்தரோ, திரையரங்கு உரிமையாளரோ புகார் அளித்ததாக இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை. ஆனால், படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு காட்சியைப் பற்றி 'பட் ராஜு' வகுப்பைச் சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
'லிங்கா' ரஜினிகாந்த், அனுஷ்கா அழைப்பின் பேரில் ஊருக்கு வரும் போது, அவரை வழியில் ஒரு புலவர் மறித்து ரஜினியைப் பற்றி ஒரு கவிதை சொல்லும் காட்சி, தங்களது சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை அவமானப்படுத்துவதாகக் கூறி குகட்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக சில தெலுங்கு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால், தமிழில் அந்தக் குறிப்பிட்ட காட்சியை ஏற்கெனவே நீக்கி விட்டார்கள். தெலுங்கில் அந்தக் காட்சியை இன்னும் நீக்கவில்லை போலிருக்கிறது. ஆந்திரா, தெலுங்கானாவில் பல திரையரங்குகளில் 'லிங்கா' படத்தை சில நாட்களுக்கு முன்பே படத்தைத் தூக்கி விட்டார்கள் என்றும் சொல்கிறார்கள்.