ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இலங்கையை சேர்ந்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். சல்மான் கான் உடன் கிக் படத்தில் ஜோடி போட்டவர், அடுத்தப்படடியாக ராய் என்ற படத்தில் நடித்துள்ளார். முதன்முறையாக இப்படத்தில் இரண்டு வேடத்தில் நடிக்கிறார் ஜாக்குலின், அதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். இப்படத்தில் ஜாக்குலின் ஜோடியாக ரன்பீர் கபூர் மற்றும் அர்ஜூன் ராம்பால் ஆகியோர் நடிக்கின்றனர். விக்கி சிங் இயக்குகிறார், பூஷண் குமார் தயாரிக்கிறார். இப்படத்தின் டிரைலர் டிசம்பர் 17ம் தேதி வௌியானது. ராய் படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பும் கிடைத்திருக்கிறது. இப்படம் 2015ம் ஆண்டு வௌியாக இருக்கிறது. தான் முதன்முறையாக இரண்டு வேடத்தில் நடித்த படம் வௌியாக இருப்பதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் ஜாக்குலின்.
இதனிடையே, ஜாக்குலினுக்கு இலங்கையில் ஏராளமான நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் இருக்கிறார்களாம், அவர்கள் எல்லோரும் இப்படத்தின் டிரைலரை இங்கு திரையிட வேண்டும் என்று கேட்டு வருகிறார்களாம். தன்மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கும் அவர்களுக்காக ராய் படத்தின் டிரைலரை அங்கு திரையிட்டு காட்ட எண்ணினார் ஜாக்குலின். இதுதொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் பூஷணிடமும் பேசியுள்ளார், அவரும் ஓ.கே. சொல்லிவிட்டார். தயாரிப்பாளரிடமிருந்து இப்படி ஒரு பதில் வந்ததையடுத்து உற்சாகமான ஜாக்குலின், இப்போது தனது தாய்நாட்டு ரசிகர்களுக்காக ராய் டிரைலரை திரையிட்டு காட்ட வேண்டிய ஏற்பாடுகளை செய்து வருகிறார்.