Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

பொன்விழா படங்கள்- பூம்புகார்: திரைவடிவில் ஒரு தமிழ் காவியம்!

20 டிச, 2014 - 11:25 IST
எழுத்தின் அளவு:

இளங்கோவடிகள் எழுதிய 'சிலப்பதிகாரம்', தமிழர்கள் வாழ்வையும், கலாச்சாரத்தையும் சொல்லும் அற்புத காவியம். கணவனின் படுகொலைக்கு நீதி கேட்டு மதுரை மன்னனையே கேள்விகேட்டு மதுரையை எரித்த வீரப் பெண்ணின் வரலாறு. அதுவே தி.மு.க., தலைவர் மு.கருணாநிதியின் கைவண்ணத்தில் திரைக்கதை வடிவமெடுத்து ''பூம்புகார்'' என்ற திரைக்காவியமாக 1964ம் ஆண்டு வெளிவந்தது. பி.நீலகண்டன் இயக்கியிருந்தார்.


எஸ்.எஸ்.ராஜேந்திரன் கோவலனாகவும், விஜயகுமாரி கண்ணகியாகவும் நடித்திருந்தார்கள், ராஜஸ்ரீ மாதவியாக நடித்திருந்தனர். ஆர்.சுதர்சனம் இசை அமைத்திருந்தார். மேகலா பிக்சர்ஸ் தயாரித்திருந்தது.


சமூக படங்களில் கருணாநிதியின் பராசக்தி ஒரு புரட்சியை ஏற்படுத்தியதைப்போல பூம்புகாரும் தனியானதொரு புரட்சியை ஏற்படுத்தியது. புராண படங்களும், மாயாஜால படங்களும் வந்து கொண்டிருந்த காலத்தில் வெளிவந்த பிரமாண்ட சரித்திர படம். வியக்க வைக்கும் அரங்க அமைப்புகள், சண்டை காட்சிகள், சோழனின் அரண்மனை இடிந்து தடைமட்டமாகும் காட்சிகள், மதுரை தீப்பறி எரியும் கிளைமாக்ஸ் காட்சிகள் என பிரமிக்க வைத்தது.


எஸ்.எஸ்.ராஜேந்திரனும், விஜயகுமாரியும் கோவலன் கண்ணகியாக நடிக்கவில்லை, வாழ்ந்திருந்தார்கள். பின்னாளில் நிஜ வாழ்க்கையிலும் இணைந்தார்கள்.


கதை : எல்லோரும் அறிந்த சிலப்பதிகார கதைதான். பூம்புகாரைச் சேர்ந்த கண்ணகிக்கும், கோவலனுக்கும் திருமணம் நடக்கிறது. கோவலன் சம்பாதிக்கும் பொருள் அனைத்தும் அவர் ஆசை நாயகி மாதவிக்கு செல்கிறது. இதனால் கோவலன் கண்ணகி இருவரும் வறுமை நிலைக்கு வருகிறார்கள். மீதம் இருக்கிற மாணிக்க சிலம்பை வைத்து புதிய தொழில் செய்து பிழைக்கலாம் என்று மதுரைக்கு வருகிறார்கள். ஒரு சிலம்பை விற்கப்போன இடத்தில் மன்னன் நெடுஞ்செழியனின் மனைவியின் காணாமல்போன சிலம்பு என்று தவறாக கருதி காவலர்கள் கோவலனை குற்றவாளிக்கூண்டில் நிறுத்த, மன்னன் தீர விசாரிக்காமல் மரண தண்டனை விதிக்க கண்ணகி மன்னனிடம் நிதி கேட்டு மதுரையை எரிக்கிறாள்.


கருணாநிதி : படத்தின் முன்பகுதியில் சிலப்பதிகாரம் உருவான வரலாற்றையும், பூம்புகாரின் பழங்கால சிறப்பையும் கூறி படத்தை துவக்கி வைப்பார் கருணாநிதி. அவரது தூய தமிழ் வசனங்கள் படத்தை தூக்கி நிறுத்தியது. பராசக்தி படத்தில் இடம்பெற்ற நீதிமன்ற காட்சி போன்று பாண்டியன் நெடுஞ்செழியன் அரசவையில் கண்ணகி நீதிகேட்டு சிலம்பு வீசிய காட்சி அன்று மட்டுமல்ல இன்றும் ரசிக்கப்பட்டு வருகிறது.


"யார் கள்வன் என் கணவனா கள்வன் அவரை கள்வென் என்று சொன்ன இந்த அவையோரோ கள்வர்"


"நல்லான் வகுத்ததா நீதி. இங்கு வல்லான் வகுத்ததே நீதி"


"இது கோப்பெருந்தேவியின் சிலம்பு, இல்லை இது கோவலன்தேவியின் சிலம்பு"


"இது மாணிக்கப்பரல்கள் அல்ல என் கணவன் கோவலனின் ரத்த துளிகள்"


"கோவலன் கள்வன் அல்ல யானே கள்வன்"


"நீதி தவறிய பாண்டிய நெடுஞ்செழியனே உனக்கு செங்கோல் எதற்கு. மணிமுடி எதற்கு வெண்கொற்ற குடை எதற்கு-?"


இப்படிப்பட்ட அனல் தெறிக்கும் வசனங்கள் காலத்தை வென்று நிற்கின்றன.


தேனினும் இனிய பாடல்கள்...! : "என்னை முதன் முதலாக பார்த்தபோது என்ன நினைத்தாய்.... நான் உன்னை நினைத்தேன்...", "பொன்னாள் இதுபோலே இனி வருமா...", "வாழ்க்கை என்னும் ஓடம் வழங்குகின்ற பாடம்... உள்ளிட்ட பத்து பாடல்களும் ஆர்.சுதர்சனத்தின் இசையில் காலத்தை கடந்து நிற்கிறது.


தமிழ் சினிமா சரித்திரத்தில் பூம்புகார் தவிர்க்க முடியாத பதிவு, பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்!


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in