'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
2014ம் ஆண்டு ஜெயம்ரவி நடித்த ''நிமிர்ந்து நில்'' படம் மட்டுமே வெளிவந்தது. அந்தப் படத்தை மீடியாக்கள் பாரட்டினாலும் வணிகரீதியில் வெற்றி பெறவில்லை. 2009ல் வெளிவந்த பேராண்மைக்கு பிறகு ஜெயம் ரவி பெரிய வெற்றி எதையும் பெறவில்லை. தில்லாலங்கடி, எங்கேயும் காதல், ஆதிபகவன் படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை. நீண்ட நாள் தயாரிப்பில் இருக்கும் பூலோகம் படமும் ரிலீசாகவில்லை.
வெயிட்டிங்கில் இருக்கும் பூலோகம் படம், தற்போது தயாரிப்பில் இருக்கும் ஹன்சிகாவுடன் நடிக்கும் ரோமியோ ஜுலியட், அண்ணன் இயக்கத்தில் நயன்தாராவுடன் நடிக்கும் தனி ஒருவன், சுராஜ் இயக்கத்தில் த்ரிஷாவுடன் நடிக்கும் அப்பாடக்கர் படங்கள் 2015ல் வெளிவர இருக்கிறது.
இந்த நிலையில் புதுச்சேரியில் அப்பாடக்கர் படப்பிடிப்பில் இருந்த ஜெயம்ரவி திருநள்ளார் சனீஸ்பர பகவான் கோவிலுக்கு சென்று வழிபட்டார். கோவிலின் அனைத்து சன்னதிகளுக்கும் சென்ற அவர் சனீஸ்வர பகவான் சன்னிதியில் நீண்ட நேரம் இருந்து பிரார்த்தனை செய்தார். அவருடன் காமெடி நடிகர் சூரி, இயக்குனர் சுராஜ் ஆகியோரும் சென்றிருந்தனர். ஜெயம்ரவி வந்த தகவல் கடைசி வரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.