டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
புதுமுக இயக்குனர் ஜெயகாந்தன் இயக்கி இருக்கிற படம் விருதலாம்பட்டு. இதில் ஹேமந்த் என்பவர் ஹீரோவாக அறிமுமாகிறார், ஹீரோயினாக சான்யா ஸ்ரீவத்ஸா என்பவர் நடிக்கிறார். முதல் படத்திலேயே ஹேமந்த்குமார் துணிச்சலுடன் திருநங்கையாக நடித்திருக்கிறார்.
இதுபற்றி படத்தின் இயக்குனர் ஜெயகாந்தன் கூறியதாவது: விருத்தாசலத்தை, அந்த ஊரை சுற்றியுள்ள கிராம மக்கள் விருதலாம் என்று சுருக்கமாக சொல்வார்கள். ஹீரோவின் பெயர் பட்டு என்பதால் விருத்தாலம்பட்டு என்று பெயர் வைத்திருக்கிறோம். கிராமத்து பணக்கார வீட்டு பெண்ணை ஏழை பையன் காதாலிக்கிறான். இதனால் அவன் பணக்காரர்களால் அடித்து ரெயில் தண்டவாளத்தில் தூக்கி வீசப்படுகிறான்.
அவனை விருத்தாசலம் திருநங்கைகள் காப்பாற்றி அழைத்து வருகிறார்கள். மீண்டும் பழைய தோற்றத்தில் நடமாடினால் அவனை கொன்று விடுவார்கள் என்பதால் திருநங்கையாக மாற்றுகிறார்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தொடர்ந்து வரும் கதை. படத்தை எடுத்து முடித்துவிட்டோம். திருநங்கையாக நடிக்க ஏற்ற முகமாக வேண்டும் என்று ஆடிசன் வைத்து ஹேமந்த்குமாரை தேர்வு செய்தோம். அவரும் துணிச்சலாக நடித்துக் கொடுத்தார். அடுத்த மாதம் ரிலீசாகிறது.