பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகமானவர் மாஜி நடிகை ராதாவின் இளைய மகள் துளசி நாயர். அதையடுத்து, கேமராமேன் ரவி கே.சந்திரன் இயக்கிய யான் படத்தில் நடித்தார். ஆனால் அந்த இரண்டு படங்களிலுமே துளசி நாயர் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்தார். இருப்பினும் அந்த இரண்டு படஙகளுமே தோல்வியடைந்து விட்டதால், அதையடுத்து அவரை யாரும் படங்களுக்காக புக் பண்ணவிலலை.
ஆனபோதும், மும்பையில் இருந்து அவ்வப்போது சென்னை வந்து சில பிரபல டைரக்டர்களை சந்தித்து படவாய்ப்பு கேட்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார் துளசிநாயர். ஆனால் அப்படி அவர் சான்ஸ் கேட்ட இயக்குனர்கள் யாரும் கண்டுகொள்ளாதபோதும், தற்போது ஒரு புதுமுக டைரக்டர்கள் துளசிநாயருக்கு அடுத்த பட வாய்ப்பை கொடுக்க முன்வந்துள்ளாராம்.
இதற்காக கடல் படத்திற்கு அவரை புக் பண்ண மணிரத்னம் மும்பை சென்றதுபோலவே, இந்த புதுமுக டைரக்டரும் மும்பைக்கு சென்று துளசி நாயரிடம் கதை சொல்லியிருக்கிறார். முதல் இரண்டு படங்களை விடவும் இந்த படத்தில் தனக்கு லீடு ரோல் என்பதால் சம்பளம்பற்றிகூட வாய் திறக்காமல் படப்பிடிப்பு எப்போது என்று சொல்லுங்கள். நான் தயாராக இருக்கிறேன் என்று அவர்களுக்கு வாக்குறுதி வழங்கியிருக்கிறாராம் துளசி.
ஆனால், அந்த படத்திற்கு இன்னும் ஹீரோ யார் என்பதே முடிவு செய்யவில்லையாம். இருப்பினும், தனக்கு வேறு படங்கள் இல்லாததால், புதுமுக நடிகர் என்றாலும் நான் நடிக்கிறேன் என்று அவர்களிடம் முன்கூட்டியே தனது நிலையை தெரிவித்து விட்டாராம் துளசி நாயர்.