'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வடிவேலு போன்ற காமெடி ஹீரோக்களுடன் நடித்தால் அதன்பிறகு சினிமாவில் பெரிதாக வளர முடியாது என்று தெனாலிராமன் படத்தில் அவருடன் நடித்த இந்தி நடிகை மீனாட்சி தீட்ஷித்தை பலரும் பயமுறுத்தினர். அதோடு, இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன் போன்ற படங்களில் நடித்த ஸ்ரேயா உள்ளிட்ட சில நடிகைகள் காணாமல் போனதையும அவரிடம் சொன்னார்கள். ஆனால், அப்படி சொன்னதை அடுத்து வடிவேலுவுடன் நடிக்க மாட்டேன் என்று பல நடிகைகள் திரும்பிச்சென்றபோதும், மீனாட்சி தீட்ஷித் மட்டும்தான் எதைப்பற்றியும் எனக்கு கவலையில்லை. வடிவேலு ஒரு சிறந்த நடிகர். அவர் நடித்த படங்களைப்பார்த்து நான் விழுந்து விழுந்து சிரித்தேன். அதனால் நான் அவருடன் டூயட் பாடுவது உறுதி என்று துணிச்சலாக தெனாலிராமன் பட்த்தில் நடித்தார். அதோடு, இளவரசி கெட்டப்பில் படுகவர்ச்சியாகவும் நடித்திருந்தார்.