'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பல்வேறு சர்வதேச படவிழாக்களில் விருதுகளை குவித்து வரும் மராட்டிய படம் கபுஸ் கொண்டியாச்சி கோஸ்தா. முடிவில்லா கதை என்று பொருள். நாக்பூர் பகுதியில் கடனை கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் வாழ்க்கையை மையமாக கொண்ட படம். அப்படி தற்கொலை செய்து கொண்ட ஒரு விவசாய தம்பதிகளின் 3 மகள்கள் வாழ்க்கையில் எப்படி போராடி ஜெயிக்கிறார்கள் என்பது கதை. மகரந்த அனுஷ்பூர், சமிதாகுரு, பரத் கஷ்பூர், கவுரி கோங்கே நடித்துள்ளனர்.
9வது ஆசிய திரைப்பட விழா உள்பட பல்வேறு பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை பெற்றுள்ளது. இதனை மிருனாளினி போஷல் என்ற பெண் இயக்குனர் இயக்கியுள்ளார். இவர் அடிதட்டு மக்களின் குறிப்பாக விவசாய மக்களின் பிரச்னைகளை மையமாக கொண்ட 50 ஆவணப் படங்களை இயக்கி உள்ளார். அவர் இயக்கிய முதல் திரைப்படம் இது.
தற்போது இந்தப் படம் 87வது ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படங்களின் அடுத்து சுற்றுக்கு வந்திருக்கிறது. அதாவது இப்போது பட்டியலிடப்பட்டுள்ள 323 படங்களுக்குள் வந்திருக்கிறது. இறுதி சுற்று வரை செல்லும் வாய்ப்பிருப்பதாக சினிமா பார்வையாளர்கள் கருதுகிறார்கள். "விருதுகளை மனதில் வைத்து இந்தப் படத்தை இயக்கவில்லை. மக்களின் உணர்வுகளை மனதில் வைத்து இயக்கியது" என்கிறார் மிருனாளினி.