தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து |
சென்னை 28 படத்தில் அறிமுகமாகி மளமளவென வளர்ந்தவர் ஜெய். சுப்பிரமணியபுரம், ராஜா ராணி, திருமணம் என்னும் நிக்காஹ், கோவா, வடகறி படங்களில் நடித்தார். தற்போதும் 5 படங்களில் நடித்து வருகிறார். ஜெய் குடிபோதையில் வாகனம் ஓட்டி போலீசிடம் சிக்கிய சம்பவம் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி கூறப்படுவதாவது: ஜெய், ராயப்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்த விருந்து ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு ராயப்பேட்டை மேம்பாலம் வழியாக மயிலாப்பூருக்கு காரில் வந்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர். ஜெய் காரை சோதனை செய்தபோது அவர் போதையில் இருப்பதை உறுதி செய்து அதற்கான அபராதத்தை விதித்தனர். ஜெய் நடிகர் என்பதை போலீசார் அறியவில்லை. ஆனால் அங்குகூடிய பொதுமக்ககள் அவர் நடிகர் என்பதை கண்டுபிடித்து சூழ்ந்துவிட்டனர். பின்னர் அங்கிருந்து ஜெய் வேகமாக சென்று விட்டிருக்கிறார்.
இந்த செய்தியை போலீசார் மறைத்தபோதும் அந்த பகுதி பொதுமக்களின் வாயிலாக வெளிவந்திருக்கிறது. இந்த செய்தி சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.