'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இந்தி நடிகை ஜாக்குலின் நம்ம ஊர் அமலா, த்ரிஷா மாதிரி பிராணிகள் நலனின் அக்கறை காட்டுகிறவர். அதற்கான பல பணிகளை செய்து வருகிறார். இதனால் அமெரிக்காவில் உள்ள பிராணிகள் நல உரிமை அமைப்பு (பீட்டா) ஜாக்குலினின் பிராணிகள் நலச் சேவைகளை பாராட்டி 2014ம் ஆண்டின் சிறந்த பெண்மணியாக தேர்ந்தெடுத்து விருது வழங்கி உள்ளது.
"பிராணிகள் மீது ஜாக்குலின் கனிவும், பரிவும் காட்டுவதில் உதாரணமாக திகழ்கிறார்" என்று பீட்டா அமைப்பின் இங்கிலாந்து நாட்டு இயக்குனர் மிமி பிகேச்சி தெரிவித்துள்ளார். ஜாக்குலினை போன்றே நீதிபதி ராதாகிருஷ்ணனுக்கும் சிறந்த மனிதர் விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்த நீதிபதிகளில் ஒருவர்.