தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் சூர்யா, நயன்தாரா, பிரணீதா மற்றும் பலர் நடித்து வரும் படம் 'மாஸ்'. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக பல்கேரியாவில் நடைபெற்று வந்தது. அங்கு மிக நீண்ட ஷெட்யூல் நடைபெற்றிருக்கிறது. அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் 'மாஸ்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விடுமாம். அதன் பின் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் ஆரம்பமாகி பிப்ரவரிக்குள் முடிந்த பின் படத்தை மார்ச் மாதக் கடைசியில் வெளியிட முடிவெடுத்திருக்கிறார்களாம்.
சூர்யா, 'மாஸ்' படம் மூலம் அவருடைய வெற்றியை நிரூபித்து ஆக வேண்டிய ஒரு கட்டாயத்தில் உள்ளார். 'அஞ்சான்' படத்திற்கு சமூக வலைத்தளங்களில் எழுந்த அதிரடியான விமர்சனங்களால் அந்தப் படத்தின் இயக்குனரான லிங்குசாமி மட்டும் பாதிக்கப்படவில்லை, சூர்யாவும்தான் அதிகமாகப் பாதிக்கப்பட்டார்.
'மாஸ்' எந்த மாதிரியான படம் என்பது இதுவரை வெளியாகவில்லை. சூர்யாவுடன் வெங்கட் பிரபு முதன் முறையாக இணைந்துள்ளார். அஜித்துக்கும் சில தோல்விப் படங்கள் வெளியாக இருந்த நிலையில்தான் 'மங்காத்தா' படத்தின் மூலம் அஜித் ரசிகர்களை வெற்றிக் கொண்டாட்டத்தில் திளைக்க வைத்தார் வெங்கட் பிரபு. அதே மேஜிக்கை 'மாஸ்' படத்திலும் பண்ணுவாரா என்பதை மார்ச் மாதம் வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.