பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சிலதினங்களுக்கும் முன்னர் பாகிஸ்தானை மட்டுமல்ல, உலகையே உலுக்கிய ஒரு சம்பவம் பெஷாவர் தாக்குதல். பள்ளி குழந்தைகள் என்று கூட பார்க்காமல் பயங்கரவாதிகள் நடத்திய இந்த கொடூர தாக்குதலில் பள்ளிக்குழந்தைகள் சுமார் 130 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கணக்கான குழந்தைகளும் காயமடைந்தனர். இந்த சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் இதற்கு கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், இந்த சம்பவத்தை பார்த்து கண்கலங்கியதாக கூறியுள்ளார் நடிகை ப்ரியங்கா சோப்ரா.
சமீபத்தில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் ப்ரியங்கா சோப்ரா. அப்போது அவர் கூறுகையில், நான் ஒரு இடத்திற்கு பயணம் செய்து கொண்டிருந்தேன். அப்போது யதேச்சையாக டிவி பார்த்தபோது இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக டிவியில் காண்பித்து கொண்டிருந்தனர். அந்த சம்பவத்தை பார்த்தவுடன் நான் கண்கலங்கிவிட்டேன். என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. என் மனது மிகவும் வலித்தது. இப்படி ஒரு சம்பவத்தை பார்த்தபின்னர் எனக்கு பேச்சு கூட வரவில்லை என்றார்.
முன்னதாக இதுகுறித்து தனது டுவிட்டரில் ஒரு டுவிட் செய்துள்ளார் ப்ரியங்கா, அதில் இந்த சம்பவத்தை டிவியில் பார்த்த பின் என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை. மதங்கள் எப்படியெல்லாம் பயங்கரவாத தாக்குதலுக்கு பயன்படுத்தப்படுகிறது. கடவுள் இல்லை, அவர் குழந்தைகளை கொல்ல ஓ.கே. சொன்னாரா...? என்று பதிவு செய்துள்ளார்.