மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
பிரமாண்ட பட்ஜெட்டில் படம் தயாரித்து வெளியிடுவதை விட, பிரமாதமான கதைகளை தயாரித்து வெளியிட்டால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்ற தொழில் ரகசியத்தை தெரிந்து வைத்திருக்கிறார் தனுஷ். அதன்காரணமாகவே தான் தயாரிக்கும் எந்த படமாக இருந்தாலும் கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறாராம் அவர்.
மேலும், தன்னிடம் கதை சொல்ல வருபவர்கள், இத்தனை கோடி பட்ஜெட்டில் ஒரு கதை வைத்திருக்கிறேன் கேட்கிறீர்களா? என்று கேட்டால், முதலில் கதையை சொல்லுங்கள். அதை எத்தனை கோடியில் தயாரிக்கலாம் என்பதை நான் சொல்கிறேன் என்கிறாராம். அதோடு, தான் நடித்த லோ பட்ஜெட் படங்களை குறிப்பிட்டு, நான் நடித்த பிரமாண்ட படங்களை விட இந்த லோ பட்ஜெட் படங்கள்தான் வெற்றி பெற்றன. காரணம், அந்த படங்களின் கதைதான். அதனால் எப்போதுமே நல்ல கதைதான் ஜெயிக்கும். அதனால் எனக்கு பட்ஜெட்டை விட கதைதான் முக்கியம் என்கிறாராம். முககியமாக, வேலையில்லா பட்டதாரி படத்தை இயக்கிய கேமராமேன் வேல்ராஜ்கூட, உங்களுக்காக ஒரு கதை வைத்திருக்கிறேன். அதுவும் செலவே இல்லாத கதை என்று சொன்னதையடுத்துதான் அவரிடம் கதையே கேட்டாராம் தனுஷ்.