'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
அனுராக் காஸ்யாப்பின் பான்ஞ் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார் நடிகை தேஜஸ்வினி கொல்காபுர். சென்சார் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் இப்படம் தியேட்டருக்கு வரவில்லை, ஆனால் இணையதளங்களில் இப்படம் வௌியாகிவிட்டது. அதன்பின்னர் சில படங்களில் நடித்தார் தேஜஸ்வினி. இந்நிலையில் இப்போது மீண்டும் அனுராக் காஸ்யாப்பின், அக்லி படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இப்படத்தில் நடிப்பது குறித்து தேஜஸ்வினி கூறுகையில், படத்தின் ஒன்-லைனைத்தான் அனுராக் சொன்னார், அதன்பின் அவரிடம் நான் கதையே கேட்வில்லை, அவர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. மீண்டும் அவரது படத்தில் நடிப்பது சந்தோஷம், இந்த அக்லி படம் எனக்கு சிறந்ததொரு வாய்ப்பை பெற்று தருமா என்று எனக்கு தெரியாது, அவரது படத்தில் நடிப்பதே மகிழ்ச்சி தான். பாடுவதற்கு என்று வாய்ப்புகள் எதுவும் வரவில்லை, அக்லி படத்திற்கு பிறகு பாடுவதற்கும் வாய்ப்பு வரலாம் என்கிறார் தேஜஸ்வினி.