எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் |
நடித்த படங்களும் ஓடவில்லை...புதுப்படங்களும் வரவில்லை.... அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், கடந்த சில வருடங்களாக வீட்டில் சும்மாவே உட்கார்ந்திருந்தார் சிபிராஜ். தயாரிப்பாளர்கள் தன்னை நம்பி படம் எடுக்க வருவார்கள் என்ற நம்பிக்கையை ஒரு கட்டத்தில் இழந்துவிட்ட சிபிராஜ் வேறு வழியில்லாமல் சொந்தப்படம் எடுக்கம் அளவுக்கு தள்ளப்பட்டார். நடிகர் சிபிராஜ் தயாரித்து நடித்த 'நாய்கள் ஜாக்கிரதை' படம் சமீபத்தில் ரிலீசானது.
என்ன ஆச்சர்யம்... சிபி மட்டுமல்ல யாருமே எதிர்பார்க்காத வகையில் நாய்கள் ஜாக்கிரதை படம் வர்த்தகரீதியில் வெற்றிப் பெற்றது. ரஜினியின் லிங்கா படம் வெளியான நிலையில் கூட இன்னமும் ஒரு சில தியேட்டர்களில் நாய்கள் ஜாக்கிரதை படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் படு உற்சாகமடைந்துள்ள சிபிராஜ் நாய்கள் ஜாக்கிரதை படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார். முதல் பாகத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜனே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். அடுத்த ஆண்டு இறுதியில் இதன் வேலைகள் ஆரம்பமாகுமாம்.
சத்யராஜின் 'நாதம்பாள் ஃபிலிம் ஃபேக்டரி” தயாரித்து, சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியிருந்த இப்படத்தினை வேறு மொழிகளில் ரீ-மேக் செய்ய உரிமை கேட்டும் நிறைய பேர் சிபிராஜை தொடர்பு கொண்டுள்ளனர். தமிழக உரிமையை 70 லட்சத்துக்கு விற்றார் சிபி. படமோ 4 கோடி வசூல் செய்து படத்தை வாங்கிய விநியோகஸ்தருக்கு லாபம் கொடுத்தது. எனவே ரீமேக் ரைட்ஸை பெரிய விலைக்கு விற்று லாபம் பார்க்க முடிவு செய்துள்ள சிபி கோடிக்கணக்கில் விலை சொல்கிறாராம். இந்தப் படம் வசூல் ரீதியாக நல்ல வெற்றிப் பெற்றுள்ளதால் வேறு படங்களில் நடிக்கவும் சிபிராஜுக்கு நிறைய அழைப்புகள் வந்திருக்கிறதாம்!