விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
பொதுவாக தொலைக்காட்சி தொடர்கள் திங்கள் முதல் வெள்ளி வரை 30 நிமிட எபிசோடாக ஒளிபரப்பாகும். சில முக்கிய தொடர்களாக இருந்தால் பகலில் ஒளிபரப்பாகும் எபிசோடை இரவில் மறுஒளிபரப்பு செய்வார்கள். அல்லது தொடர் முடிந்த பிறகு அந்த தொடருக்கு அமோக ஆதரவு ஏற்பட்டிருந்தால், தொடரையே இன்னொரு முறை மறுஒளிபரப்பு செய்வார்கள். அப்படித்தான் விஜய் டி.வி மகாபாரதம் சீரியலை இப்போது ஒளிபரப்பி வருகிறது.
புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் ஸ்ரீகிருஷ்ண அவதாரம் என்ற தொடரை முற்றிலும் புதிய முறையில் மறுஒளிபரப்பு செய்கிறார்கள். அதாவது திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும் 5 எபிசோட்களையும் தொகுத்து ஞாயிற்றுக்கிழமை பகல் 2 மணிக்கு ஒளிபரப்புகிறார்கள். இதனால் வார நாட்களில் சில எபிசோட்களை பார்க்க முடியாமல் போயிருந்தாலும் கதையின் கண்டினியூட்டி மிஸ்சாகாமல் இருக்க இது உதவும். ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் தொடரின் முக்கிய பகுதிகள் ஒளிபரப்பாகும் நிலையில் இந்த புதிய முயற்சியை செய்திருக்கிறார்கள். இனி இது மற்ற தொடர்களுக்கும் பரவலாம்.