இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
வித்யா பாலன் நடித்த, பாபி ஜாசூஸ் படத்தை பார்த்த ரயில்வே அதிகாரிகள், ரயில்களில் நடக்கும் சட்டவிரோத செயல்களை தடுப்பதற்கு, தனியார் துப்பறியும் நிறுவனங்களின் உதவியை நாடியுள்ளனர். பிரபல நடிகை வித்யா பாலன், பாபி ஜாசூஸ் என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். இதில், தனியார் துப்பறியும் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்ணாக, 12 விதமான கெட் அப்புகளில் அவர் நடித்திருந்தது, பாலிவுட் ரசிகர்களிடையே பாராட்டை தேடித் தந்தது.
இந்நிலையில், மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும், மத்திய ரயில்வே அதிகாரிகள் சிலர், சமீபத்தில், இந்த படத்தை பார்த்துள்ளனர். அதில், சமூக விரோத செயல்களை தடுப்பதற்காக, வித்யா பாலன் மேற்கொள்ளும் முயற்சிகள், அவர்களை கவர்ந்தன. இதையடுத்து, ரயில்களில் நடக்கும் சட்டவிரோத செயல்களை கண்டுபிடித்து தடுப்பதற்காக, தனியார் துப்பறியும் நிறுவனங்களின் உதவியை அவர்கள் நாடியுள்ளனர்.முக்கியமான ரயில்களில், தனியார் துப்பறியும் நிறுவனங்களின் ஊழியர்களை பணியில் அமர்த்தி, சமூகவிரோத செயல்களை தடுக்க, முடிவு செய்துள்ளனர்.
மத்திய ரயில்வே பொது மேலாளர் சுனில் குமார் சூத் கூறுகையில், அந்த படத்தில் வித்யாவின் நடிப்பும், குற்றங்களை தடுக்க, துப்பறியும் நிபுணராக அவர் மேற்கொள்ளும் முயற்சிகளும் எங்களை கவர்ந்தன. இதனால் தான், அதேபோன்ற முயற்சிகளை ரயில்வேயிலும் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம், என்றார்.
வித்யா பாலன் கூறுகையில், சினிமா என்பது, சமூகத்தில் நடக்கும் சம்பவங்களின் பிரதிபலிப்பு. நான் நடித்த படம், ஒரு நல்ல முயற்சிக்கு முன் உதாரணமாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, என்றார்.