இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படம் பொங்கலுக்கு வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், திரைப்படத்துறையிலும் விநியோகஸ்தர்கள் மத்தியிலும் ஐ படம் பொங்கலுக்கு வெளிவருமா என்ற சந்தேகம் நிலவுகிறது.
ஐ படத்தின் மீது பல கோடி ரூபாய் வங்கியில் கடன் வாங்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொகையை செலுத்தினால்தான் ஐ படத்தை வெளியிட வங்கியிலிருந்து க்ளியரன்ஸ் கிடைக்கும் என்கிறார்கள். தயாரிப்பாளர் தரப்பிலோ ஐ படம் பொங்கலுக்கு உறுதி என்று சொல்லப்படுகிறது.
பொங்கலுக்கு முன்பே அதாவது ஜனவரி 9ஆம் தேதியே ஐ படத்தை உலகமெங்கும் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம். அதோடு, ஐ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை மதுரை அழகர் ஃபிலிம்ஸ் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது என்றும், கோவை ஏரியாவின் திரையரங்க வெளியீட்டு உரிமையை மட்டும் காஸ்மோ ஃபிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது என்றும் சொல்கிறார்கள். கௌதம் மேனன் இயக்கும் அஜித் நடிக்கும் என்னை அறிந்தால் படம் ஜனவரி 8ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருந்தனர்.