இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கல்லுக்குள் ஈரம் படம் தொடங்கி, ரெட்டச்சுழி, பாண்டியநாடு ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் பாரதிராஜா. கல்லுக்குள் ஈரம் வெற்றியடைந்தால் தொடர்ந்து நடிக்கும் எண்ணத்தில் இருந்ததாகவும், அப்படம் படு தோல்வியடைந்த காரணத்தால் நடிக்கும் ஆசையை கைகழுவியதாகவும் அவரே ஒரு பேட்டியில் கூறி இருகிகிறார். அதன் பிறகு பல வருடங்களுக்குப் பிறகு ஷங்கரின் தயாரிப்பில் நடித்த, ரெட்டச்சுழி படமும் தோல்வியடைந்தநிலையில் இனி கேமராவுக்கு முகத்தைக் காட்டவே வேண்டாம் என நினைத்திருந்தார் பாரதிராஜா.
பாண்டியநாடு படத்தில் விஷாலின் அப்பாவாக நடிக்க பெரும் சம்பளத்தைக் கொடுத்து அவரது பிடிவாதத்தை தளர்த்தி அப்பா கேரக்டரில் நடிக்க வைத்தனர். அப்படத்தில் பாரதிராஜாவின் நடிப்பு பாராட்டப்பட்டது. அதைவிட பாண்டியநாடு படமும் வெற்றிபெற்றது. தன் நடிப்புக்குக் கிடைத்த பாராட்டு பாரதிராஜாவை அடுத்த கட்டத்துக்கு அதாவது ஹீரோவாக நடிக்க தூண்டி உள்ளது.
ஓம் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் பாரதிராஜா. சலீம் படத்தை இயக்கிய என்.வி.நிர்மல் குமார் ஓம் படத்தை இயக்குகிறார். சலீம் வெற்றியைத் தொடர்ந்து பெரிய ஹீரோவை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு இவரை தேடி வந்திருக்கிறது. பெரிய சம்பளமும் தருவதாக கூறி இருந்தனர். இவர் பாரதிராஜாவின் டிவி சீரியலில் உதவியாளராக இருந்தவர். எனவே நிர்மல்குமாரை அழைத்து தான் ஹீரோவாக நடிக்கும் ஓம் படத்தை இயக்கும்படி கூறி இருக்கிறார் பாரதிராஜா. குருநாதருக்காக சம்பளம் வாங்காமல் ஓம் படத்தை இயக்குகிறார் நிர்மல்குமார்.
என்னே...ஒரு குரு பக்தி!