இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
திகார் சிறையில் உயர் போலீஸ் அதிகாரியாக பணியாற்றியவர் கிரண்பேடி. இவரை தான் இயக்கியுள்ள திகார் படத்தின் ஆடியோ விழாவுக்கு சென்னைக்கு அழைத்து வந்திருந்தார் டைரக்டர் பேரரசு. அப்போது திகார் படத்தின் ட்ரெய்லரைப்பார்த்த கிரண்பேடி, இந்த படத்தில் வன்முறை காட்சிகள் இடம்பெற்றிருப்பது போல் தெரிகிறது. ஆனால், நீங்களெல்லாம் நினைப்பது போல் திகார் ஒன்றும் வன்முறை நிறைந்த இடமல்ல. அது ஒரு அமைதியான இடம். திரைப்படங்களில்தான் வன்முறை களம் போன்று அதை சித்தரிக்கிறீர்கள் என்றார்.
மேலும், நான் திகார் ஜெயிலின் அனுபவங்கள் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். அந்த புத்தகம் இத்தாலிய பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது. அந்த புத்தகத்தில் உள்ள விசயங்களை படமாக்கினால் ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று சொன்ன கிரண்பேடி, அனைவருக்கும் கல்வி அறிவு வேண்டும். அப்போதுதான் வன்முறைகள் குறையும். அதனால் நான் ஜெயிலில் இருந்த படித்தவர்களை பயன்படுத்தி படிப்பறிவு இல்லாமல் இருந்தவர்களுக்கு கல்வி அறிவை புகட்டினேன் அவையனைத்தும் அந்த புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது என்று கூறிய அவர், எனது புத்தகத்தை இதுவரை தமிழாக்கம் செய்ய யாரும் முன்வரவில்லை என்று பேசினார்.