டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சுட்டகதை படத்தில் நடித்த லட்சுமிப்ரியாவிற்கு அந்தப் படம் தோல்வி அடைந்ததால் அதற்கு பிறகு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது அவர் களம் என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார்.
ஒரு வீட்டிற்குள் நடக்கும் இந்த படத்தில் மொத்தம் 6 கேரக்டர்கள் மட்டுமே உள்ளது. வெண்ணிலா கபடி குழு ஸ்ரீனிவாசன், கோலிசோடா மதுசூதனன், எஸ்.எஸ்.மியூசிக் பூஜா ஹம்ஜத், கனி நடித்துள்ளனர். ராபர்ட் இயக்குகிறார், முகேஷ் ஒளிப்பதிவு செய்கிறார், பிரகாஷ் நிக்கி இசை அமைக்கிறார்.
"ஒரு வீடு அதற்குள் இருக்கும் பேயிடம் மாட்டிக்கொள்ளும் நான்கைந்து பேர் என்பதுதான் வழக்கமான பேய் படக் கதை. ஆனால் இந்தப் படத்தில் வீடு இருக்கிறது. நான்கைந்து கேரக்டரும் இருக்கிறது ஆனால் வித்தியாசமான வேறு கோணத்தில் சொல்லப்படுகிற கதை. சென்னை நகரின் அவுட்டோரில் ஒரு பழைய பங்களாவை வாடகைக்கு எடுத்து அதன் அழகான சுவரை அழுக்காக்கி பழைய வீடு மாதிரி மாற்றி படப்பிடிப்பு நடத்தினோம் படப்பிடிப்பு முடிந்ததும் மீண்டும் பழைய படியே வெள்ளையடித்தோம். இதற்கே பல லட்சம் செலவானது" என்கிறார் இயக்குனர் ராபர்ட்.