'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? |
சினிமாவுக்கு ஆஸ்கர் மாதிரி இலக்கிய உலகிற்கு சாகித்ய அகாடமி விருது. ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகாடமி கவிதை திருவிழாவிற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திறமையான கவிஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, வரவழைக்கப்பட்டு கவிதை வாசிக்க அனுமதிக்கப்படுவார்கள். இது கவிஞர்களுக்கான பெரிய அங்கீகாரமாகும்.
இந்த ஆண்டு வருகிற டிசம்பர் 6ந் தேதி கேரள மாநிலம் கொச்சியில் நடக்கும் சாகித்ய அகாடமியின் தெற்கு, வடகிழக்கு மாநில கவிதை விழாவில் கலந்து கொண்டு கவிதை வாசிக்க கவிஞர் கபிலன் வைரமுத்துவும், கவிஞர் ரவிசுப்பிரமணியமும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த விழாவில் இதற்கு முன்பும் தமிழ் நாட்டின் முன்னணி கவிஞர்கள் கலந்து கொண்டு கவிதை வாசித்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு நா.முத்துகுமார் அழைக்கப்பட்டிருந்தார். இந்த ஆண்டு கபிலன் வைரமுத்து அழைக்கப்பட்டிருக்கிறார். வைரமுத்துவின் மகனும் வளர்ந்து வரும் பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்துதான் இதில் கலந்து கொள்ளும் வயது குறைவான இளம் கவிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.