'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
பலபேரை கூட்டணி சேர்த்துக் கொண்டு படம் தயாரிப்பது இப்போது (க்ரவுட் பண்ட்) பேஷனாகி வருகிறது. தமிழ்நாடு புகைப்பட கலைஞர்கள் சங்கத்தினர் சுமார் 60 பேர் ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு முயல் என்ற படத்தை தயாரித்து வருகிறார்கள். அதேபோன்று தற்போது டிஸ்கவரி சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் பொதுமக்களிடம் நிதி திரட்டி உச்சிமாகாளி என்ற படத்தை தயாரிக்கிறது. 100 பேர்களிடம் பணம் திரட்டி படத்தை தயாரிக்கிறார்கள். விரும்பம் உள்ளவர்கள் தயாரிப்பாளராகலாம் என்று அறிவித்திருக்கிறார்கள்.
எழுத்தாளர் ஏக்நாத் என்பவர் எழுதிய நாவலை தழுவி இந்தப் படம் எடுக்கப்படுகிறது. அவரும், அறிவுமதியும் பாடல்களை எழுதுகிறார்கள். சி.ஜே.ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கவுசிக் இசை அமைக்கிறார். மு.வேடியப்பன் இயக்குகிறார். சட்டம் ஒரு இருட்டரை ரீமேக், தொட்டால் தொடரும் படங்களில் நடித்த தமன் குமார் ஹீரோவாக நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. திருநெல்வேலி பகுதியில் படப்பிடிப்பு நடத்த இருக்கிறார்கள்.