'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவில் போராடி ஜெயித்தவர்களில் அஜீத் குறிப்பிடத்தக்கவர். அவரையடுத்து சிவகார்த்திகேயன், விஜயசேதுபதி உள்பட சில நடிகர்களும் இந்த பட்டியலில் இடம்பிடிக்கின்றனர். இப்படி தனித்து போராடி ஜெயித்த இவர்கள் சினிமா விழாக்களுக்கு செல்லும்போது, அவர்களைப்பற்றி பெருமையாக பேசுவதாக கருதி சிலர், இவர்களெல்லாம் சினிமாவில் ரொம்ப கஷ்டப்பட்டு வந்தவர்கள் என்று முன்னுதாரணமாக சுட்டிக்காட்டுகிறார்கள்.
ஆனால், இப்படி விஜயசேதுபதியைப்பற்றி யாராவது சொன்னால், கஷ்டப்பட்டு முன்னேறினார். உயிரைக்கொடுத்து நடித்தார் என்றெல்லாம் பேச வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறார் அவர். காரணம், கஷ்டப்பட்டால்தான் எந்த துறையாக இருந்தாலும் ஜெயிக்க முடியும். அதோடு, வன்மம் படத்தில் நான் உயிரைக்கொடுத்து நடித்ததாக சொல்கிறார்கள்.
அந்த கதைக்கு எப்படி தேவைப்பட்டதோ அதற்காக ரிஸ்க் எடுத்து நடித்தேன். அது எனது கடமை. கஷ்டப்பட்டு நடித்தால்தான் வெற்றி என்கிற இலக்கை அடைய முடியும். அதனால் எதையுமே நான் கஷ்டமாக நான் நினைக்கவில்லை. நினைப்பதும் தவறு. அதனால், நான் கஷ்டப்பட்டு வளர்ந்ததாக, நடித்ததாக யாரும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறார் விஜயசேதுபதி.