ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வெங்கட்பிரபு இயக்கத்தில், சூர்யா நடித்து வரும் மாஸ் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆந்திராவிலுள்ள பல ஏரியாக்களில் அடுத்தடுத்து நடந்து கொண்டிருக்கிறது. முதல்கட்டமாக நயன்தாரா கலந்து கொண்டு நடித்த நிலையில், அதையடுத்து, எமிஜாக்சன் லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்டு சில நாட்களாக படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
அதையடுத்து இப்போது சூர்யா நடிக்கும் சண்டை காட்சியொன்றை படமாக்கி வருகிறார்கள். அந்த காட்சியின் தொடக்கத்தில் ரவுடி கும்பல் சூர்யாவையும், பிரேம்ஜியையும் பைக்கில் துரத்துவார்களாம். அவர்களிடமிருந்து தப்பிக்க சூர்யா-பிரேம்ஜி இருவரும் தங்களது பைக்கில் எஸ்கேப்பாகும சேஸிங் காட்சியை கடந்த 5 நாட்களாக ஆந்திராவில் படமாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக, போக்குவரத்து நெரிசல் மிகுந்த சில சாலைகளில் அந்த சேஸிங் காட்சியை படமாக்கியபோது, சூர்யாவை காண ஆந்திராவிலுள்ள ரசிகர்கள் பெருந்திரளாக கூடிவிட்டார்களாம். இதனால் படப்பிடிப்புக்கு அவ்வப்போது இடையூறுகளும் ஏறபட்டதாம். இருப்பினும், அங்குள்ள போலீசாரின் ஒத்துழைப்போடு அந்த காட்சியை படமாக்கினார்களாம். ரவுடிகளுடன் சூர்யா மோதும் அந்த அதிரடி சண்டை காட்சியை செட் அமைத்து படமாக்கப்போகிறார்களாம்.