தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிவப்புரோஜாக்கள், கன்னிப்பருவத்திலே, முதல் மரியாதை, படிக்காதவன், அருணாச்சலம், படையப்பா உளபட ஏராளமான படங்களில் கேரக்டர் ரோல்களிலும், சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்திருப்பவர் வடிவுக்கரசி. இதில் அருணாச்சலம் படத்தில் வேதவள்ளி என்ற கதாபாத்திரத்தில் வயதான பெண்மணியாக நடித்த வடிவுக்கரசி, ரஜினியை அனாதைப்பயலே என்றெல்லாம் தைரியமாக வசனம் பேசி நடித்தார். அதையடுத்து ரஜினி ரசிகர்களின் எதிர்பபுக்கும் ஆளானார்.
ஒருகட்டத்தில் சினிமாவில் தனக்கான வாய்ப்புகள் குறைந்ததையடுத்து சீரியல்களில் நடிக்கத் தொடங்கிய வடிவுக்கரசி, சமீபத்தில் தேசிங்குராஜா படத்தில் நடித்தவர் இப்போது இடம் பொருள் ஏவல் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். மேலும் இதுவரை பெரும்பாலும் புடவை அணிந்து குடும்பப்பாங்கான வேடங்களிலேயே நடித்திருக்கும் அவருக்கு, கிளாமர் உடையணிந்த நடிகைகளைக்கண்டால் கோபம் பீறிட்டுக்கொண்டு வருகிறதாம்.
அப்படி தான் நடிக்கும் படங்களில் நடிக்கும் இளவட்ட நடிகைகள் யாராவது, பேண்ட், டீசர்ட் அணிந்து தன்னருகில உட்கார்ந்தால் அவர்களை சீண்டும் வடிவக்கரசி, என்ன டிரஸ் இது, பேண்ட், ஜட்டின்னு இப்படி போட்டு நடிச்சா கலாச்சாரம் என்ன ஆவது. வீட்டிற்குள்ள போட்டுக்க வேண்டிய டிரஸ்சை எல்லாம் போட்டு சினிமாவுல நடிச்சா எப்படி என்று அட்வைஸ் செய்வது போன்று கிண்டலும் செய்கிறாராம்.
இதனால், கேமரா முன்பு கிளாமராக உடையணிந்து நடிக்கும் நடிகைகள், அதையடுத்து வடிவுக்கரசியைக்கண்டு விட்டால் ஓட்டம்பிடித்து விடுகிறார்களாம்.