ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஒரு தொலைக்காட்சி சேனலில் இடம்பெற்றிருந்தவர் சக்சேனா. அப்போது பல முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்களை மற்ற சேனல்களுடன் போட்டி போட்டு வாங்கி வந்தார். இதனால் அவரை பிடித்து தங்கள் படங்களை அந்த சேனலில் விற்பனை செய்து விட நினைத்த தயாரிப்பாளர்களெல்லாம் அவரை சினிமா விழாக்களுக்கு தவறாமல் அழைத்து வந்தனர்.
இதனால் சக்சேனா இல்லாத சினிமா விழாவே இல்லை என்கிற நிலை ஒரு காலத்தில் இருந்தது. ஆனால், பின்னர் சில பிரச்னைகளில் சிக்கிய அவர் அந்த சேனலை விட்டு வெளியேறியதால், பின்னர் சினிமா நிகழ்ச்சிகளில் தலைகாட்டுவதையும் நிறுத்தினார். அந்த வகையில் கடந்த ஒன்றரை வருடங்களாக சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்த சக்சேனா, நேற்று சென்னையில் நடைபெற்ற 1 பந்து 4 ரன் 1 விக்கெட் என்ற படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், சில பிரச்னைகளால் நான் சினிமாவில் இருந்து வெளியேறினேன். ஆனால், இந்த படத்தை தயாரித்திருக்கும் எனது நண்பர், படத்தை ரிலீஸ் பண்ண முடியாமல சிரமப்பட்டார். அவர் உதவி கேட்டதால் இந்த படத்தை வெளியிடுவதற்கு முன்வந்திருக்கிறேன் என்று சொன்ன சக்சேனா, நண்பருக்கு உதவி செய்ய வேணடும் என்பதோடு இந்த படமும் என்னை வெகுவாக கவர்ந்தது. அதனால்தான் ஒன்றரை வருடத்திற்கு பிறகு இந்த படம் மூலம் முதன்முதலாக மீண்டும் சினிமாவில் என்ட்ரி ஆகியிருக்கிறேன் என்றார்.