தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை இயக்கிய பார்த்திபன் தனது அடுத்த படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இந்த நேரத்தில் அவருக்கு நடிப்பதற்கும் பல வாய்ப்புகள் கதவை தட்டியுள்ளன. தமிழில், திகார், மாஸ், சூதாடி ஆகிய படங்களை கைவசம் வைத்திருப்பவர், மலையாளம், கன்னடத்திலும் சில படங்களில் நடித்து வருகிறார்.
இதில், பேரரசு இயக்கியுள்ள திகார் படத்தில் ஒரு தாதா வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் முதலில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் என்பவரை வைத்து மலையாளத்தில்தான் திகார் படத்தை ஆரம்பித்தார் பேரரசு. அதையடுத்து, மலையாள நடிகர் நடித்த படத்தை தமிழில் டப் செய்தால் பெரிய அளவில் எடுபடாது என்பதால், பார்த்திபனை உள்ளே இழுத்து, இரண்டு ஹீரோ கதையாக மாற்றியிருக்கிறார்.
அந்த வகையில், திகார் படத்தில் பார்த்திபன்-உன்னி முகுந்தன் இரண்டு பேருமே தாதாக்களாகத்தான் நடித்திருக்கிறார்களாம். அதிலும், பார்த்திபனின் நையாண்டிக்கு ஏற்ற வேடம் என்பதால், அவருக்கு கதையில் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாராம் பேரரசு. ஆக, சூர்யாவுடன் மாஸ் படத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கும் பார்த்திபனுக்கு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் சூதாடியிலும் வெயிட் வேடம்தானாம்.
ஆக, திரையில் இனி தோன்ற மாட்டேன். திரைக்குப்பின்னால் இருந்து டைரக்டராக மட்டுமே செயல்படப்போகிறேன் என்று பார்த்திபன் சொன்னதில் இருந்து இப்போது அவருக்கு திரையில் தோன்றும் மெகா வாய்ப்புகளாக கிடைத்து வருகின்றன. அதனால் அடுத்த பட வேலைகளைகூட கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு நடிப்பில் கூடுதல் முனைப்பு காட்டி வருகிறார் பார்த்திபன்.