‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
காமெடி நடிகை கோவை சரளா கொங்கு தமிழ் பேச்சுக்கு புகழ்பெற்றவர். அவர் எந்தப் படத்தில் நடித்தாலும் கொங்கு தமிழ்தான் பேசுவார். முந்தானை முடிச்சு படத்திலிருந்து கடைசியாக வெளிவந்த அரண்மனை படம் வரைக்கும் கொங்கு தமிழ்தான் பேசுவார். அது அவரது அடையாளம். சினிமாவில் மட்டும்ல நிஜத்திலும் கொங்கு தமிழில்தான் பேசுவார்.
முதன் முறையாக கொம்பன் படத்தில் கோவை சரளா கொங்கு தமிழ் இல்லாமல் ராமநாதபுரம் பகுதி வட்டார மொழி பேசி நடித்து வருகிறார். படத்தில் கார்த்தியின் அம்மா கோட்டையம்மாளாக நடித்து வருகிறார். அவரது கணவராக மலையப்ப பாண்டியன் என்ற கேரக்டர். அவர் படத்தில் வர மாட்டார். ஆனால் அவர் இருப்பதை போன்ற உணர்வை கோவை சரளாவின் நடிப்பில் உணர வைப்பார்களாம்.
இதற்காக கோவை சரளா ராமநாதபுரம் பகுதி பேச்சு வழக்கை கேட்டு அதற்கேற்ப தானும் பேசிப்பார்த்து பழகி டயலாக் பேசியிருக்கிறாராம். இது முற்றிலும் புதிய கோவை சரளாவை காட்டும் முயற்சி என்கிறார் படத்தின் இயக்குனர் முத்தையா.