ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
பாலிவுட்டின் முத்த மன்னன் என்று பெயர் எடுத்தவர் இம்ரான் ஹாஸ்மி. லிப்-லாக் முத்தங்கள் இன்றி இவரது படங்கள் இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. இவர் உங்லி என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது, இப்படம் தொடர்பான புரொமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். சமீபகாலமாக இம்ரான் ஹாஸ்மியின் படத்தில் அதிகமாக முத்தக்காட்சிகள் இடம்பெறுகிறது என்று பெண்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக அமீர்கான் நடத்தி வரும் சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியிலும் விவாதிக்கப்பட்டது.
இதுகுறித்து இம்ரான் ஹாஸ்மியிடம் கேட்டபோது, அவரது (அமீர்கான்) படங்களில் பைக்கில் சென்று வங்கிகளில் கொள்ளை அடிப்பது தான் பிரதான காட்சிகளாக இருக்கிறது. வங்கி கொள்ளையில் அவர் கிளாமராக விளங்குகிறார். மேலும் சினிமாவை பொழுதுபோக்காக பார்க்க வேண்டும், இல்லையென்றால் அது பெண்களுக்கு எதிரான விஷயமாக மாறிவிடும். மேலும் இதுபோன்ற காட்சிகளை கட்டுப்படுத்த சென்சார் என்ற அமைப்பு இருக்கிறது. இப்படி ஒவ்வொரு விஷயங்களுக்கும் முட்டுக்கட்டை போட்டால் சினிமா போரடித்துவிடும் என்று கூறியுள்ளார்.