அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் |
கார்த்தி, நாகார்ஜுனா இருவரும் நாயகர்களாக நடிக்க தமிழ், தெலுங்கில் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் ஸ்ருதிஹாசனை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம். இரு மொழிகளில் தயாராகும் படம் என்பதால் இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகை ஒருவர் ஹீரோயினாக நடித்தால் படத்திற்கு பிளஸ்ஸாக இருக்கும் என நினைத்து, ஸ்ருதிஹாசனை அணுகியிருக்கிறார்களாம்.
ஸ்ருதிஹாசன் இதற்கு முன் நாகார்ஜுனா, கார்த்தி ஆகியோருடன் நடித்தது இல்லை. எனவே இந்த புது காம்பினேஷன் அமைந்தால் அது படத்திற்கும் பக்கபலமாக இருக்கும் என எதிர்பார்க்கிறார்களாம். ஸ்ருதிஹாசன் தற்போது சில ஹிந்திப் படங்களிலும், விஜய் படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார். மகேஷ் பாபு ஜோடியாக ஒரு தெலுங்குப் படத்தில் சில நாட்கள் மட்டுமே நடித்துள்ளார். அதற்குள் அந்தப் படத்திலிருந்து அவர் நடிக்காமல் விலகிவிட்டார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. விஜய் படத்தில் நடிப்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து மகேஷ்பாபு படத்திலிருந்து விலகிவிட்டார் என்று ஆந்திர மீடியாக்கள் செய்தி வெளியிட்டு வருகின்றனவாம்.
ஆனால், அது பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. விஜய்யுடன் நடிக்கும் படத்திற்கும், மகேஷ் பாபுவுடன் நடிக்கும் படத்திற்கும் தேதிகளை ஒரே சமயத்தில் ஒதுக்குவதில் ஸ்ருதிஹாசனுக்குப் பிரச்சனையாக இருக்கிறதாம். அவரோ, விஜய் படத்தில் நடிக்கத்தான் ஆர்வமாக இருக்கிறார் என ஆந்திரவாலாக்கள் குற்றம் சாட்டுகிறார்களாம்.