ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ராணாவும் ஒருவர். தமிழில், அஜீத் நடித்த ஆரம்பம் படத்தில் அவரது நண்பராக நடித்திருந்தார். இவருடன் தெலுங்கு படங்களில நடித்தபோது நெருக்கமாக பழகினார் த்ரிஷா. இருவரும், படப்பிடிபபு இல்லாத நாட்களில் டேட்டிங் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
அதனால் அவர்கள் காதலிப்பதாக செய்திகள் பரவி வந்தநிலையில், கல்யாணம் வரை சென்றதாக கூறப்பட்டது. கடைசி நேரத்தில ராணாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், ராணாவை விட்டு மெல்ல மெல்ல விலகிய த்ரிஷா, சமீபகாலமாக அவரை சந்திப்பதே இல்லையாம். இந்த நிலையில்தான், தயாரிப்பாளர் வருண்மணியனுடன் கல்யாண செய்திகளில் சிக்கியிருக்கிறார் த்ரிஷா.
இதற்கிடையே, த்ரிஷாவை தனது கேர்ள் ப்ரண்ட் பட்டியலில் இருந்து நீக்கிவிட்ட ராணா, தற்போது சமந்தாவுடன் நட்பு வளர்த்து வருவதாக கூறப்படுகிறது. இதை வெளிப்படையாக அவரே ஒத்துக்கொண்டிருப்பதோடு, சமந்தாவுடன் தான் டேட்டிங் செல்ல விரும்புவதாகவும் மீடியாக்களிடம் கூறி வருகிறார். இந்த வெளிப்படையான செய்திகளுக்குப்பிறகு இதுவரை சித்தார்த்-சமந்தாவைப் பற்றி காதல் செய்திகளை பரப்பி வந்த ஆந்திர மீடியாக்கள், இப்போது சித்தார்த்தை நீக்கி விட்டு ராணா- சமந்தாவைப்பற்றி சூடான செய்திகளை பரப்பிக்கொண்டிருக்கிறார்களாம்.