எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா |
கடல் படத்தின் தோல்விக்குப் பிறகு சற்றே துவண்டு போன மணிரத்னம் பிறகு சுதாரித்துக்கொண்டு தன் புதுப்படத்தைத் தொடங்கினார். துல்கர் சல்மான், நித்யா மேனனை வைத்து மணிரத்னம் இயக்கி வரும் படத்துக்கு அதிகாரபூர்வமாக இதுவரை தலைப்பு அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் ஓகே கண்மணி என்ற தலைப்பு சூட்டப்பட உள்ளதாக மணிரத்னம் தரப்பு தகவல் கூறுகிறது. ஆரவாரம் இல்லாமல் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. மாதவன், ஷாலினி நடித்த அலைபாயுதே படப் பாணியில் இப்படமும், காதல் ரசம் சொட்டும் ரொமான்டிக் காதல் கதையாம்!
கடல்படத்தில் நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களுக்கு நஷ்டஈடு கொடுத்தால்தான் ஓகே கண்மணி படத்தை பிரச்சனை இல்லாமல் ரிலீஸ் செய்ய முடியும். எனவே இந்தப் படத்தை அதிகம் செலவு செய்யாமல், குறுகிய காலத்தில் எடுத்து முடிக்க திட்டமிட்டிருந்தார் மணிரத்னம். அதை அவர் செயலிலும் காட்டியுள்ளார். வழக்கமாக மணிரத்னம் இயக்கும் படம் என்றால் அதற்கு நிறைய மாதங்கள் எடுத்துக் கொள்வார். ஆனால் இப்படத்தை மணிரத்னம் படு வேகமாகவே எடுத்திருக்கிறாராம்.
சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு நடந்துள்ளது. துல்கர் சல்மான், நித்யா மேனன் உடன் கனிகா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். மணிரத்னம் தயாரித்த ஃபைவ் ஸ்டார் படத்தில் அறிமுகமானவர்தான் கனிகா என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு மணிரத்னத்தின் ஆஸ்தான இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.