இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
செக் மோசடி புகார் தொடர்பாக நடிகை ஜீவிதாவுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஐதராபாத் கோர்ட் உத்தரவிட்டது. ராஜமரியாதை, நானே ராஜா நானே மந்திரி, பதில் சொல்வாள் பத்ரகாளி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை ஜீவா. தமிழ் தவிர நிறைய தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் ராஜேசேகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் தனது கணவருடன் சேர்ந்து படங்களை தயாரித்து வந்தார்.
இந்நிலையில், சேகர் ரெட்டி என்பவருக்கு ஜீவிதா ரூ.22 லட்சத்துக்காக செக் கொடுத்துள்ளார். அந்த செக்கை, சேகர் ரெட்டி வங்கியில் செலுத்தியபோது பணமில்லாமல் செக் திரும்பி வந்துவிட்டது. மேலும் அதற்குரிய மாற்று செக்கையோ அல்லது பணத்தையோ ஜீவிதா கொடுக்கவில்லை. இதனையடுத்து சேகர் ரெட்டி, ஐதராபாத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக ஜீவிதாவுக்கு கோர்ட் பலமுறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் ஜீவிதா அதையும் கண்டுகொள்ளவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜீவிதாவுக்கு ஜாமினில் வெளிவராத முடியாத அளவுக்கு பிடிவாரண்ட் அளித்து கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று வழக்கில் தீர்ப்பளித்த ஐதராபாத் கோர்ட், ஜீவிதாவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.