நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் |
அபிஷேக் செளபே இயக்கத்தில், உத்டா பஞ்சாப் என்ற படத்தில் நடிக்க ஷாகித் கபூர் ஒப்பந்தமானார். செளபே, இந்தாண்டு இறுதிக்குள்ளாக, படப்பிடிப்பை துவக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், ஷாகித்தின் தற்போதைய கால்ஷீட்டை பார்க்கும்போது, அடுத்த ஆண்டு இறுதி்க்குள் கூட, படப்பிடிப்பை துவக்க முடியாதது போல் தோன்றுகிறது. ஏனெனில், ஷாகித் கபூர், தற்போது ஷந்தார் படத்தின் படப்படிப்பிற்காக போலந்து சென்றுள்ளார். ஷந்தார் பட இயக்குனர் விகாஷ் பால், சூட்டிங்கை, ஒரே செட்டியூலேயே முடிக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, ஈரோஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜ்-டி.கே இயக்கும் பார்சி படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் சூட்டிங், ஜனவரியில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. உத்டா பஞ்சாப் படத்தின் சூட்டிங்கை, பார்சி படத்தின் சூட்டிங்கிற்கு பிறகே நடத்த முடியும் என்ற இக்கட்டான நிலை, அபிஷேக் செளபேவிற்கு ஏற்பட்டுள்ளது. உத்டா பஞ்சாப் படத்தில், ஷாகித் கபூரை நடிக்க வைக்கலாமா? அல்லது வேறொரு நடிகரை நடிக்க வைக்கலாமா? என்ற சிந்தனையில், தற்போது செளபே மூழ்கியுள்ளார்.....