கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
ரஜினி, கமலைவிட பிசியாக இருக்கிறார் மில்க் கானா. இவர் பாடினாலோ, ஆடினாலோ படம் ஹிட்டுன்னு ஒரு சென்டிமெண்ட்டை யாரோ தட்டிவிட மில்க்கானா காட்டில் கன பண மழை. கைவசம் 100 படங்கள் என்கிறார்கள். பாட்டுக்கு பத்து லட்சம், பாடி ஆட 20 லட்சம், சில காட்சிகள் நடிக்க வேண்டியது இருந்தால் பேக்கேஜா 25 லட்சம் என்பதுதான் அவரின் மெனுகார்ட்.
அதையும் கொடுக்க தயாரா இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். இதனால் வந்த படத்துக்கெல்லாம் அட்வான்ஸ் வாங்கி போட்டுவிட்டு இப்போது அதனை செய்து கொடுக்க முடியாமல் திணறுகிறாராம். ஒரு நாளைக்கு நான்கு பாட்டு எழுத வேண்டும், இரண்டு படங்களிலாவது நடிக்க வேண்டும் அல்லது ஆட வேண்டும் என்கிற நிலை இதைச் செய்ய முடியாமல் தவிக்கிறார்.
இதனால் கால்ஷீட் சொதப்பல்கள் ஏராளமாகி நிறைய தயாரிப்பாளர்களுக்கு பண விரயம். பல படங்கள் இவருக்காக காத்திருக்கிறது. விஷயம் பஞ்சாயத்துக்கு போயி பெயர் பஞ்சராகுறதுக்குள்ள பலரிடம் வாங்கிய அட்வான்சை திரும்பிக் கொடுத்து ஜகா வாங்கிவிட திட்டமிட்டிருக்கிறாராம் மில்க் கானா. அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சும்பாங்க. அது கானா விஷயத்துல சரியா இருக்கு என்கிறார்கள்.