ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் சினிமா அடுத்த இரண்டு மாதங்களில் இதுவரை பார்த்திருக்காத ஒரு வசூலைப் பெறப போவதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்து மிக முக்கியமான மூன்று திரைப்படங்கள் வெளிவரப் போவதே அதற்குக் காரணம். இதற்கு முன்னர், இப்படிப்பட்ட படங்கள் வந்திருக்க வாய்ப்பிருந்தாலும், அப்போதிருந்த சூழ்நிலையில் கிடைத்த வசூலை விட தற்போது கிடைக்கப்போகும் வசூல் நிச்சயம் சாதனைக்குரியதாகவே இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அடுத்த மாதம் டிசம்பர் 12ம் தேதி, ரஜினிகாந்த், சோனாக்ஷிசின்ஹா, அனுஷ்கா நடிக்க 'லிங்கா' படம் வெளிவர உள்ளது. அதன்பின், ஜனவரி 2015ல் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடித்துள்ள 'ஐ' படமும், அஜித்குமார், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில், கௌதம்மேனன் இயக்கியுள்ள 'என்னைஅறிந்தால்' படமும் வெளியாக உள்ளது. இந்தப்படங்களின் செலவு சுமாராக 300 கோடி ரூபாய் அளவில் இருந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த மூன்று படங்களும் வசூலிக்கும் தொகைதான், தமிழ் சினிமாவை, அடுத்த வியாபார கட்டத்திற்குக் கொண்டு செல்லும் என்று வினியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.