அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
வி.எல்.எஸ். ராக் சினிமா சார்பில் வி.சந்திரன் தயாரித்திருக்கும் படம் தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும். இந்த படத்தை ராம் பிரகாஷ் இயக்கியிருக்கிறார். நகுல், அட்டகத்தி தினேஷ், பிந்துமாதவி, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். தமனின் இசைக்கு யுகபாரதி, மதன் கார்க்கி பாடல்கள் எழுதியுள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.
அப்போது டைரக்டர் ராம் பிரகாஷ் படம் பற்றி கூறுகையில், இந்த படத்தின் தயாரிப்பாளர் வி.சந்திரனை சிகரம் தொடு படத்தை இயக்கிய கெளரவ்தான் என்று அறிமுகம் செய்தார். அதையடுத்து நான் சந்திரனை தொடர்பு கொண்டபோது, மதியம் 3 மணிக்கு கதை சொல்ல அழைத்தார். அதைக்கேட்ட நான் பயந்துவிட்டேன். காரணம், மதியம் சாப்பிட்டு விட்டு கதை கேட்கும் தயாரிப்பாளர்கள் பெரும்பாலும தூங்கி விடுவார்கள். அவர்கள் தூங்கிக்கொண்டிருக்க நாம் கதை சொல்ல வேண்டியதிருக்கும்.
இருப்பினும், தயாரிப்பாளர் சொன்ன நேரத்தை விடக்கூடாது என்று சென்றேன. அதேபோல் அவரும் சாப்பிட்டு விட்டு ஒரு ஷோபாவில் அமர்ந்தார். அதைப்பார்த்து, அபபடின்னா, நாம் கதை சொல்லச்சொல்ல இவர் தூங்கி விட இப்போதே தயாராகி விட்டார் என்று நினைத்தபடிதான் கதை சொல்ல ஆரம்பித்தேன. ஆனல், அவர் தூங்கவில்லை கதையை முழுசுமாக கேட்டு விட்டு, கதை பிடித்திருக்கிறது. படம் பண்ணுவோம் என்று சொல்லி அடுத்த நாள் வரச்சொன்னார்.
ஆனால் நான், இப்படித்தான் சொல்வார்கள். அடுத்த நாள் செல்லும்போது ஏதாவது காரணத்தை சொல்லி தட்டிக்கழிப்பார்கள் என்ற நினைத்துக்கொண்டே சென்றேன். ஆனால், அவரோ, சொன்னபடியே எனக்கு அட்வான்ஸ் கொடுத்து அக்ரிமென்ட் போட்டு படத்தை ஆரம்பித்தார். இப்போது படமும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்த படத்தின் கதை மூன்று ட்ராக்காக செல்கிறது. நகுல்-ஐஸ்வர்யா தத்தா, அட்ட கத்தி தினேஷ்-பிந்துமாதவி, சதீஷ்-ஷாலு என மூன்று ஜோடிகள் இருக்கிறார்கள். வெவ்வேறு பாதைகளில் பயணிக்கும் மூன்று கதைகளும் கடைசியில் ஒரு நேர்க்கோட்டில் சந்திக்கும்.
இந்த படத்துக்காக நகுல, தினேஷ் இருவருமே கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அதிலும் நகுல், வல்லினம் பட்த்தை விட மெச்சூரிட்டியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த படத்தில் ஒரு இளம் விஞ்ஞானி போன்று நடித்திருக்கிறார். ஒரு காட்சியில் 40 அடி செல்போன் டவரில் ஏறி நின்று தைரியமாக நடித்தார் என்று கூறும் ராம் பிரகாஷ். செல்போன் மயமாகி விட்ட இந்த காலத்தில், செல்போன் அனைத்தும் கட் ஆனால் என்ன ஆகும் என்பதுதான் இப்படத்தின் கதை என்றார்.