பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
காதல், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, வெயில், அறை எண் 305ல் கடவுள், ஈரம், ரெட்டைச்சுழி ஆகிய படங்களை தனது எஸ் பிக்சர் சார்பில் தயாரித்தவர் டைரக்டர் ஷங்கர். இதில் சில படங்கள் தோல்வியடைந்ததால் தொடர்ந்து படம் தயாரிப்பதை நிறுத்தினார். இந்த நிலையில், நான்கு ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது கப்பல் என்ற படத்தை வாங்கி வெளியிடுகிறார்.
இந்த படத்தை அவரிடத்தில் உதவியாளராக பணியாற்றிய கார்த்திக் ஜி. கிரிஷ் இயக்கியிருக்கிறார். வைபவ், சோனம் பாஜ்வா, கருணாகரன், விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். நடராஜன் சங்கரன் இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்கள் எழுதியுள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று இரவு 7 மணி அளவில் சென்னையில் நடைபெற்றது. விழாவில், டைரக்டர் ஷங்கர். ஏ.ஆர்.ரகுமான், விஜய், விக்ரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது டைரக்டர் ஷங்கர் பேசுகையில், கடந்த நான்கு ஆண்டுகளாக எனக்கு படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்படவில்லை. ஆனால், இந்த கப்பல் படத்தை நான் பார்த்தபோது, அதன் காமெடியை ரொம்பவே ரசித்தேன். அதற்காகவே இந்த படத்தை நானே வெளியிடவும் முடிவு செய்தேன். இப்படத்தை தமிழ்நாட்டு ரசிகர்கள் பெரிய அளவில் வெற்றி பெறச்செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது எனறார்.
அதையடுத்து கப்பல் பட இயக்குனர் கார்த்திக் ஜி.கிரிஷ் பேசும்போது, நான் ஷங்கர் சாரின் இந்தியன் படத்தை பார்த்துதான் சினிமாவுக்கே வந்தேன். எனது பைக்கிலகூட இந்தியன் என்றுதான் எழுதி வைத்திருந்தேன். அதோடு, ஷங்கரிடத்தில்தான் உதவி இயக்குனராக பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டேன அத்றகாக கடின முயற்சிக்கு பிறகு அவரிடமே உதவி இயக்குனராக பணியாற்றினேன்.
இப்போது அவரிடததில் இருந்து வெளியே வந்து கப்பல் படத்தை இயக்கியிருக்கிறேன். இந்த படத்தை பார்த்த ஷங்கர் சாரே அதை வாங்கி வெளியிடுவது மிகப்பெரிய சந்தோசத்தை தந்திருக்கிறது. அவர் படத்துக்கு கொடுத்த நற்சான்றிதழே கப்பலை வெற்றிப்படமாக்கி விட்டது. முக்கியமாக சின்ன படமான கப்பல் பிரமாண்ட இயக்குனரின் கைக்கு மாறியதால் இப்போது பிரமாண்டமான கப்பலாகி விட்டது என்றார்.
இதையடுத்து, கப்பல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளினி, ஒரு பேப்பரை டைரக்டர் ஷங்கரின் கையில் கொடுத்து, அதில் ஒரு கப்பலை நீங்கள் செய்து விட்டால் இந்த கப்பல் படம் சக்சஸ் உறுதியாகி விடும் என்றார். அதையடுத்து அந்த பேப்பரை வாங்கிய ஷங்கர் அதை இரண்டாக, நான்காக மடித்து ஒரு கப்பலை செய்து கொடுத்தார். அந்த கப்பலை மேடையில் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி தொட்டியில் உள்ள தண்ணீரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நீந்த விட்டார்.