தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
1992ல் நாளை தீர்ப்பு படத்தில் அறிமுகமானவர் விஜய். அதேபோல் விக்ரம் 1990ல் என் காதல் கண்மணி என்ற படத்தில் அறிமுகமானவர். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வித்தியாசத்தில் சினிமாவில் என்ட்ரி கொடுத்த இவர்கள் இருவரும் திரைக்குபின்னால் ரொம்ப நல்ல நண்பர்களாம். ஒருவர் நடித்த படத்தை இன்னொருவர் பார்த்து விட்டு உடனே நிறை,குறைகளை மனம் விட்டு பேசிக்கொள்ளும் அளவுக்கு அவர்களுக்கிடையே துளியும் ஈகோ இல்லாத நட்பு உள்ளதாம்.
இதுபற்றி விஜய் கூறுகையில், விக்ரம் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொருவிதமான கெட்டப்பில் நடிக்கிறார். அதனால் அவரது ஒவ்வொரு படத்தையும் நானும் ஒரு ரசிகனாக ஆவலுடன் எதிர்பார்த்திருப்பேன். அவரது உழைப்பு ரொம்ப அசாத்தியமானது. அதிலும் ஐ படத்தில் இதுவரை நடித்ததையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு பின்னி எடுத்திருப்பதாக சொல்கிறார்கள். அதனால் அந்த படம் எனது எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.