டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில், கோச்சடையான் படம் திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக, அப்படத்தின் இயக்குனர் செளந்தர்யா மற்றும் லதா ரஜினிகாந்த் பங்கேற்றனர்.
கோவா கலா அகாடமியில், கோச்சடையான் படம் திரையிடப்பட உள்ளதாகவும், இதில் ரஜினிகாந்த் கலந்துகொள்ள இருப்பதாக விழா நிர்வாகிகளால் முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. பின் படம் திரையிடும் அரங்கம் குறித்த அறிவிப்பில், ரஜினி பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
சொந்த பணி காரணமாக, ரஜினி பெங்களூருவிற்கு சென்று இருப்பதால், அவரால், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை என்று ரஜினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின் செளந்தர்யா பேசியதாவது, கோச்சடையான் எனது இயக்கத்தில் வெளிவந்துள்ள முதல் படம். முதல் படமே, கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருப்பது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளித்துள்ளது. போட்டோ- ரியலிஸ்டிக் தொழில்நுட்ப முறையில் படமாக்கப்பட்டிருக்கும் முதல்படம் இது என்றும், மற்றும் இந்த தொழில்நுட்பத்தை, தான் அறிமுகப்படுத்த வாய்ப்பு அளித்த ரஜினிக்கு, இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்வதாக செளந்தர்யா கூறினார்.