இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
தற்போது இந்தியா முழுவதும் முத்தப் போராட்டம் நடந்து வருகிறது. பொது இடங்களில் முத்தமிடுவது தவறு என்று கலாச்சார அமைப்புகளும், அது எங்கள் உரிமை என்று சில அமைப்புகளும், மாணவர்களும் போராடி வருகிறார். கேரளாவில் நடந்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது வலைப் பக்கத்தில் எழுதியிருப்பதாவது: பொதுமக்களின் அன்றாட பிரச்னைகள் நிறைய இருக்கிறது. அதை விட்டுவிட்டு இதுபோன்ற பிரச்னைகளில் கவனம் செலுத்துவது நல்லதில்லை. காதலர்களும், மாணவர்களும், மாணவிகளும் பேசிக் கொள்வதற்கு தடை விதிப்பது அழகல்ல.
முத்தமிடுவதற்கும், முத்தமிடாமல் இருப்பதற்கும் நமக்கு உரிமை உண்டு. என் முன்னால் முத்தமிடாதே என்று சொல்வற்கு யாருக்கும் உரிமை இல்லை. அது அநாகரீகமா தெரிந்தால் விலகி செல்ல வேண்டியதுதான். அதே நேரத்தில் முத்தப் போராட்டம் என்ற பெயரில் பதற்றத்தையும் ஏற்படுத்த வேண்டாம்.
சமீபகாலமாக சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது அதிகரித்துள்ளது. அது குறித்து எந்த அரசியல் கட்சியும் அக்கறை கொள்ளவில்லை. இதுபோன்ற சமூக விரோத செயல்களை தடுக்க போராட வேண்டும். இவ்வாறு மோகன்லால் எழுதியிருக்கிறார்.