ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வளர்ந்து வரும் நடிகை ஸ்ரீதிவ்யா. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றியின் மூலம் உயரத்திற்கு சென்றார். அதன் பிறகு வெளிவந்த ஜீவா படமும் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. தற்போது விக்ரம் பிரபுவுடன் வெள்ளைக்கார துரை, ஜி.வி.பிரகாசுடன் பென்சில் உள்பட 5 படங்களில் நடித்து வருகிறார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கத்திற்கு முன்பு, ஸ்ரீதிவ்யா காட்டுமல்லி என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். விதார்த் ஹீரேவாகா நடித்தார். தயாரிப்பாளர் சங்கத்தில் பொருளாளராக இருக்கும் ராதாகிருஷ்ணன் தன் நண்பர்களுடன் இணைந்து தயாரித்தார். தற்போது இந்தப் படத்தில் நடிக்க ஸ்ரீதிவ்யா ம-றுப்பதாக தயாரிப்பாளர் நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த ஸ்ரீதிவ்யா கூறியிருப்பதாவது: இரண்டு வருடங்களுக்கு முன்பு நடிக்க ஒப்புக்கொண்ட படம் காட்டுமல்லி. பத்து நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்தது. அதன் பிறகு அவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும் இல்லை. நடிக்க அழைக்கவும் இல்லை. அதனால் நான் வேறு வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டேன். அந்த படத்தை தொடர்ந்து எடுப்பதில் தயாரிப்பாளர்களுக்குள் பிரச்சினை என்று கேள்விப்பட்டேன். இதுவரை அவர்கள் யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. என்கிறார் ஸ்ரீதிவ்யா.